“தர வரிசை அறியா பேதமை”

Published:

“தர வரிசை அறியா பேதமை” கி.வா.ஜ., ஒரு கட்டுரையில்: தங்கம், தன்னைப் படைத்த பிரம்மதேவனிடம் சென்று, குலுங்கிக் குலுங்கி அழுததாம். அதைப் பார்த்த பிரம்மா, ‘தங்கமே… ஏன் இப்படி அழுகிறாய்…’ என்று கேட்டாராம். உடனே தங்கம் சொன்னதாம்… ‘என்னையும் படைத்து, அந்த தட்டானையும் படைத்தாயே… அதனால் தான் அழுகிறேன்…’ என்றதாம். ‘ஏன் உனக்கு அவன் மேல் கோபம்… உன்னை நெருப்பிலிட்டு உருக்குகிறானே… அதனால் வருத்தமா?’ என்று கேட்டார். ‘இல்லை… அப்படிச் செய்வதனால் தான் நான் மாசு நீங்கி ஒளிர்கிறேன்…’ என்றது தங்கம். ‘அப்படியானால், அவன் பட்டறையில் வைத்து தகடாகத் தட்டுகிறானே… அதனால் உனக்கு வேதனை உண்டாகிறதா?’ என்று கேட்டார். ‘இல்ல இல்ல… தகடாக மாறினாலும் இறைவனுக்கே கவசமாகி விடுகிறனே…’ என்றது தங்கம். ‘பின்னே, அவன் பெரிய துளையிலிருந்து சிறிய துளையிட்டு, உன்னைக் கம்பியாக இழுக்கிறானே அப்போது உன் உடல் நலிந்து, நைந்து துன்புறுகிறாயோ…’ என்றார். ‘இல்ல இல்ல… நல்லவர்களை எல்லாம் தங்கக் கம்பி என்று என்னைத் தானே உவமானமாகச் சொல்கின்றனர்; அதனால, அதற்காக வருத்தமில்லை…’ என்றது தங்கம். ‘இதற்கெல்லாம் வருத்தம் இல்லை என்றால், நீ புலம்புவதற்கு என்ன காரணம்?’ என்று கேட்டார் பிரம்மா. ‘அந்தப் படுபாவி என்னை எடை போடும் போது, தராசில் என்னை ஒரு தட்டில் வைத்து, எனக்குச் சமமாக, மற்றொரு தட்டில், குன்றிமணியை வைத்து நிறுக்கிறானே… அந்த அவமானத்தை என்னால் தாங்க முடியவில்லை…’ என்று புலம்பியது தங்கம். — தர வரிசை அறியா பேதமையை, இப்படி அழகாகக் கற்பனை செய்து, வடமொழி கவிஞர் ஒருவர் பாடியிருக்கிறார்.download (1)

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img