February 14, 2025, 10:29 AM
26.3 C
Chennai

ஜன.4 முதல்… சென்னை – மதுரை தேஜஸ் ரயில் ரத்து!

madurai-chennai-tejas-exp
madurai-chennai-tejas-exp

வரும் ஜனவரி மாதம் 4ஆம் தேதியில் இருந்து, சென்னை – மதுரை தேஜஸ் ரயில் ரத்து செய்யப்படுகிறது. பயணிகள் ஆதரவு குறைந்ததால், இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை – மதுரை இடையே வாரத்தில் ஆறு நாட்கள் இயங்கும் வகையில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே தொடங்கப் பட்டது. மிகக் குறைவான நேர பயணம் என்பதால், பயணிகளின் ஆதரவு நன்றாக இருந்தது.

இந்நிலையில் கொரோனா கால ஊரடங்கின் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. கொரோனா தளர்வுக்குப் பின் அக்.2ல் இருந்து, மீண்டும் ரயில்கள் குறிப்பட்ட எண்ணிக்கையில் சிறப்பு ரயில்களான இயக்கப்பட்டன.

அந்த வரிசையில் தேஜஸ் ரயிலும் இயக்கப் பட்டது. எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்பட்டதால், பயணிகள் அதிகம் பேரால் இந்த ரயிலுக்கு வர முடியவில்லை என்று புகார் அளிக்கப் பட்டது. இதை அடுத்து, பயணிகள் நேரம் மாற்றம் செய்ய வலியுறுத்தியதால், அரை மணி நேரம் கழித்து இயக்கப் படும் என்று அறிவிக்கப் பட்டது.

இதன்படி அக்.12ல் இருந்து நேரம் மாற்றப்பட்டு எழும்பூரில் இருந்து காலை 6.30க்குப் புறப்பட்டு, மதுரைக்கு நண்பகல் 12.50க்கு சென்றடைந்தது. பின்னர் மதுரையில் இருந்து மாலை 3.15க்கு புறப்பட்டு இரவு 9.30க்கு சென்னை எழும்பூர் வந்தடைந்தது.

இந்த நிலையில் இந்த ரயிலிலில் பயணிகள் வருகை குறைந்ததை அடுத்து, இரு வழியிலும் ஜன.4 முதல் தேஜஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரை மாட்டுத்தாவணி பகுதி தோரணவாயில் இடிப்பில் விபத்து; பொக்லைன் ஆபரேடர் உயிரிழப்பு!

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சாலையில் நடுவே இருந்த தோரணவாயில் இடிக்கும் பணியின் போது பொக்லைன் இயந்திரத்தின் மீது கட்டிட தூண் இடிந்து விழுந்து விபத்து

IND Vs ENG ODI: மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!

இதனால் இந்திய அணி 142 ரன் கள் வித்தியாசத்தி வென்றது. தொடரின் மூன்று ஒருநாள் ஆட்டங்களையும் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரை மாட்டுத்தாவணி பகுதி தோரணவாயில் இடிப்பில் விபத்து; பொக்லைன் ஆபரேடர் உயிரிழப்பு!

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சாலையில் நடுவே இருந்த தோரணவாயில் இடிக்கும் பணியின் போது பொக்லைன் இயந்திரத்தின் மீது கட்டிட தூண் இடிந்து விழுந்து விபத்து

IND Vs ENG ODI: மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!

இதனால் இந்திய அணி 142 ரன் கள் வித்தியாசத்தி வென்றது. தொடரின் மூன்று ஒருநாள் ஆட்டங்களையும் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories