ஜன.4 முதல்… சென்னை – மதுரை தேஜஸ் ரயில் ரத்து!

madurai-chennai-tejas-exp
madurai-chennai-tejas-exp

வரும் ஜனவரி மாதம் 4ஆம் தேதியில் இருந்து, சென்னை – மதுரை தேஜஸ் ரயில் ரத்து செய்யப்படுகிறது. பயணிகள் ஆதரவு குறைந்ததால், இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை – மதுரை இடையே வாரத்தில் ஆறு நாட்கள் இயங்கும் வகையில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே தொடங்கப் பட்டது. மிகக் குறைவான நேர பயணம் என்பதால், பயணிகளின் ஆதரவு நன்றாக இருந்தது.

இந்நிலையில் கொரோனா கால ஊரடங்கின் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. கொரோனா தளர்வுக்குப் பின் அக்.2ல் இருந்து, மீண்டும் ரயில்கள் குறிப்பட்ட எண்ணிக்கையில் சிறப்பு ரயில்களான இயக்கப்பட்டன.

அந்த வரிசையில் தேஜஸ் ரயிலும் இயக்கப் பட்டது. எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்பட்டதால், பயணிகள் அதிகம் பேரால் இந்த ரயிலுக்கு வர முடியவில்லை என்று புகார் அளிக்கப் பட்டது. இதை அடுத்து, பயணிகள் நேரம் மாற்றம் செய்ய வலியுறுத்தியதால், அரை மணி நேரம் கழித்து இயக்கப் படும் என்று அறிவிக்கப் பட்டது.

இதன்படி அக்.12ல் இருந்து நேரம் மாற்றப்பட்டு எழும்பூரில் இருந்து காலை 6.30க்குப் புறப்பட்டு, மதுரைக்கு நண்பகல் 12.50க்கு சென்றடைந்தது. பின்னர் மதுரையில் இருந்து மாலை 3.15க்கு புறப்பட்டு இரவு 9.30க்கு சென்னை எழும்பூர் வந்தடைந்தது.

இந்த நிலையில் இந்த ரயிலிலில் பயணிகள் வருகை குறைந்ததை அடுத்து, இரு வழியிலும் ஜன.4 முதல் தேஜஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

Entertainment News

Popular Categories