February 11, 2025, 11:48 AM
27.5 C
Chennai

சிங்கபூர், மலேசிய பத்திரிகையாளர்களுக்கு ஏஎன்எஸ்., விருது!

ans-speech-screen-sharing

மலேசியா, சிங்கப்பூர் என இரண்டு வெளிநாட்டு தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்கு ஏ என் சிவராமன் விருது வழங்கப்பட்டுள்ளது.

மூத்த பத்திரிகையாளரும் பத்திரிகை உலகின் பிதாமகர் என்று புகழப்படுபவருமான ஏ என் சிவராமன் அவர்களின் பெயரில் வருடந்தோறும் சிறந்த பத்திரிக்கையாளர்களுக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன. தேஜஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பின் சார்பில் இந்த விருதினை சிறந்த பத்திரிகையாளர்களுக்கு வழங்கி கௌரவித்தனர்.

இந்த வருடம் ஏ என் சிவராமன் விருது வழங்கும் விழா இணைய வழியில் ஜூம் மீட்டிங் வாயிலாக நேற்று மாலை நடைபெற்றது. இதில் சிங்கப்பூரை சேர்ந்த மூத்த தமிழ்ப் பத்திரிகையாளர் எஸ் எஸ் சர்மா, மலேசியாவின் மூத்த தமிழ் பத்திரிக்கையாளர் ராமதாஸ் மனோகரன் ஆகியோருக்கு ஏ.என். சிவராமன் விருது வழங்கப்பட்டது. ஏ என் சிவராமன் பெயரன் வழி உறவினரும் கலைமகள் இதழின் ஆசிரியருமான கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் இந்த விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

இந்த விருது வழங்கும் விழாவில் ஆடிட்டர் ஜி.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் இதழின் ஆசிரியர் சுவாமி அபவர்கானந்தர் கலந்துகொண்டு பத்திரிகையியல் குறித்து பேசினார். பத்திரிகையாளர்கள் தன்னார்வ தொண்டர்களைப் போல சமூகத்தின் பொறுப்பை உணர்ந்து செய்திகளை வெளியிட்டு மக்களுக்கு உதவ வேண்டும் என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கீழாம்பூர் சங்கர சுப்ரமணியம், நாம் சொல்ல வரும் கருத்தை தாய் மொழியில் சொல்லும் போது வீரியம் மிக்கதாக அமையும். அந்த வகையில் தாய்மொழிப் பற்றும் நாட்டுப் பற்றும் இரு கண்கள் என்று கருதியவர் சிவராமன். அவர் ராஜாஜி தலைமையில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் பங்கேற்று செய்தியும் சேகரித்து வந்தார்.

இளம் பத்திரிகையாளர்கள் தற்கால செய்திகளைச் சேகரிப்பதுடன், சரித்திர நிகழ்வுகளையும் படிக்க வேண்டும். அப்போதுதான் கருத்தாழமிக்க கட்டுரைகளை எழுத முடியும். அது அவரின் வளர்ச்சிக்கும் பத்திரிகையின் வளர்ச்சிக்கும் உதவும்.

இன்று விருது பெற்றுள்ளவர்கள் தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளான சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் நடக்கும் தமிழ் மாநாடுகள் உள்ளிட்டவற்றை செய்தி ஆகியுள்ளனர். தமிழர்களின் நாடக மன்றங்கள் மற்றும் வாசகர் வட்டத்தையும் வளர்த்து எடுத்தவர்கள் இவர்கள். அவர்களுக்கு ஏ.என்.எஸ் விருது வழங்குவது மிகவும் பொருத்தமானதாக உள்ளது என்று பேசினார்.

இந்த இணைய நிகழ்ச்சிக்கான ஜூம் மீட்டிங் ஏற்பாடுகளை தேஜஸ் பவுண்டேஷன் அமைப்பின் பிடிடி ராஜன் செய்திருந்தார் சி.வி.சந்திரமோகன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். பவித்ரம் அமைப்பின் நிறுவுனர் டாக்டர் ஜாய்ஸ் திலகம் நிறைவுரை ஆற்றினார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மாறி மாறி விளையாடிக் கொண்டு இருப்பார்கள்..!

நாளைக்கே- "மாநில அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட உச்சநீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை"-

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

Topics

மாறி மாறி விளையாடிக் கொண்டு இருப்பார்கள்..!

நாளைக்கே- "மாநில அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட உச்சநீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை"-

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மதக் கலவரத்தைத் தூண்ட சதி: இந்து முன்னணி கண்டனம்!

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மத கலவரத்தை தூண்ட நினைக்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவிப்பதாக, அந்த அமைப்பின்

பஞ்சாங்கம் பிப்.10 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories