திமுக., கட்சிக் கூட்டமா? கிராம சபைக் கூட்டமா? ஏமாற்று வேலைக்கு அரசு முடிவு கட்ட வேண்டும்!

stalin-in-coimbatore
stalin-in-coimbatore

கிராம சபைக் கூட்டம் என்ற சொல்லை திமுக., பயன்படுத்துவது தவறானது. பொதுவாக கிராம சபைக் கூட்டம் என்பது உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப் பட வேண்டியது.

கிராம சபை என்பதே, மக்களாட்சியின் அடிப்படைகளில் ஒன்று! இங்கே மக்கள் கேள்வி கேட்கலாம். தங்களுக்கான பிரச்னைகளைச் சொல்லி தீர்வு காண வேண்டிய இடம். இதற்கு தீர்வு கொடுக்கும் இடத்தில் இருப்பவர்கள் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் சேவைத் துறையில் உள்ள அரசு அதிகாரிகள்!

ஆனால், கிராம சபை என்று பெயர் வைத்து, திமுக., ஒரு பஞ்சாயத்து செட்டப்பில் கூட்டம் நடத்துவது தவறானது. மேடை போட்டு, மேடையில் உள்ள அரசியல் பிரமுகர்கள் தலைவர்கள் பேசினால் அது கட்சிக் கூட்டம். அதுவே, ஒரு ஆல மரத்தை, அரச மரத்தடி திண்ணை மீது அமர்ந்து கொண்டு பேசினால், அது பஞ்சாயத்து. அதையே ஸ்டாலின் மாதிரியான நபர்கள் செய்தால், அது கட்டப்பஞ்சாயத்து!

ALSO READ:  அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

காரணம், நேற்றைய கோவை நிகழ்வுகள் ஸ்டாலினின் ரவுடித் தனத்தை கட்டம் போட்டுக் காட்டியிருக்கிறது. ஜனநாயக நாட்டில், இப்படி எவரும் பொதுப்படையாக, பொது வெளியில் ஒரு மாநிலத்தை ஆளும் முதலமைச்சரையோ, அரசியல் கட்சியினரையோ, பொதுமக்களையோ மிரட்டியதில்லை. கேரளத்தில் கம்யூனிஸ்ட்கள் கூட மறைமுக மிரட்டலைத்தான் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால், தமிழகத்தில் ஸ்டாலின் மேடையிலேயே, கடுமையான தாக்குதல் ரவுடியிச கட்டப்பஞ்சாயத்து மிரட்டல் எல்லாம் விடுக்கிறார்.

திமுக.,வின் தொடக்க கால அரசியல் நடவடிக்கையில் இருந்து இன்று வரை அக்கட்சி அதே ரவுடியிச மிரட்டல் பாதையிலேயே பயணிக்கிறது என்பதற்கு எடுத்துக் காட்டாகத்தான் இது அமைந்திருக்கிறது..

கோவையில் எதிர்க்கேள்வி கேட்ட பெண்மணியை திமுக.,வினர் ஆபாச வார்த்தைகளில் பேசியும், திட்டியும் அடிக்கப் பாய்ந்து துரத்தியும் தங்கள் இயல்பான உடல்மொழியைக் காட்டியிருக்கிறார்கள்.

திமுக., தொப்பி அணிந்து வரவேண்டும், திமுக.,வினர் தான் அங்கே இருக்க வேண்டும், அல்லது திமுக.,வினர் கூட்டத்துக்கு ஆள் சேர்க்க கூலி கொடுத்து அழைத்து வரப்பட வேண்டும், அங்கே எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது, அமைதியாக அமர்ந்திருக்க வேண்டும் என்றெல்லாம் கட்டளை யிடுவதாயிருந்தால், இந்தக் கூட்டத்தை திமுக.,வின் மரத்தடிக் கூட்டம் என்றே விளம்பரப் படுத்தியிருக்க வேண்டும், மாறாக கிராம சபைக் கூட்டம் என்றெல்லாம் விளம்பரப் படுத்துவதை நடுநிலை நீதிபதிகள் நிச்சயம் கண்டித்து, ஒரு நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும்!

ALSO READ:  சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

1 COMMENT

  1. கிராம சபை கூட்டம் என்பது ஒரு பதிவு செய்யப்பட்ட தலைப்பைப்போல. அரசைத் தவிர வேறு யாரும் பயன்படுத்த அநுமதிகக் கூடாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories