முதல்ல கொஞ்சல்.. பிறகு மஞ்சத்தில் மயங்க வைத்து.. எஞ்சியதை எடுத்து ஓட்டம் பிடிக்கும் கில்லாடி பெண்!

cell phone
cell phone

ஒரு பெண் ஊடகத்தில் பலரிடம் நட்பு கொண்டு டேட்டிங் வரவைத்து, அவர்களிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் சுருட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டார்.

புனேவில் வசிக்கும் 27 வயதான சயாலி தேவேந்திர காலே என்ற பெண் இந்த ஊரடங்கு காரணமாக தான் வேலை பார்த்து வந்த டெலிகாம் நிறுனத்திலிருந்த வேலையை இழந்தார்.

அதனால் அவர் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டமிட்டார் .அதன் படி சமூக ஊடகத்தில் பல போலியான பெயரில் டேட்டிங் கணக்கை துவங்கினார். அதில் அவரின் போட்டோவை பார்த்து விட்டு பல ஆண்கள் அவரோடு டேட்டிங் வருவதற்கு துடித்தார்கள்.

அதனால் அவர் அவர்களின் சபலத்தை பணமாக்க திட்டமிட்டார். அப்படி அவரிடம் சிக்கும் ஆண்களை அவர் பல ஹோட்டல்களுக்கும் ,லாட்ஜுகளுக்கும்,மற்றும் அபார்ட்மெண்டுக்கும் வரவைப்பார். அதன் பிறகு அவர்களிடம் முதலில் கொஞ்சுவது போல் நடித்துவிட்டு , பிறகு அவர்களுக்கு தூக்க மாத்திரை கலந்த குளிர் பானம் கொடுப்பார். அதை வாங்கி குடித்து டேட்டிங் வந்தவர்கள் அதன் பிறகு நினைவற்ற நிலைக்கு சென்று விடுவார்கள். அதன் பிறகு அந்த காலே அவர்களிடமிருந்து பணம் நகைகளை கொள்ளையடித்து விட்டு சென்று விடுவார்.

facebook under watch
facebook under watch

இப்படியாக கடந்த ஒரு ஆண்டில் 16 ஆண்களையும் பல பெண்களையும் ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் சுருட்டியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட ஒருவர் சமீபத்தில் போலீசில் புகாரளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை பிடிக்க வலை விரித்தார்கள். அப்போது போலீசார் அந்த பெண்ணிடம் டேட்டிங் வருவது போல் ஊடகத்தில் தொடர்பு கொண்டு அவர் சொன்ன இடத்திற்கு சென்றனர். அங்கு வைத்து அந்த காலேவை போலீசார் கைது செய்தார்கள்.

பிறகு அவரிடமிருந்து பல லட்சக்கணக்கான பணத்தையும், லட்சக்கணக்கனான மதிப்புள்ள தங்க நகைகளையும் போலிசார் பறிமுதல் செய்தார்கள். மேற்கொண்டு அவரிடம் ஏமாந்தவர்களை பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

Entertainment News

Popular Categories