December 6, 2025, 7:03 PM
26.8 C
Chennai

அமலுக்கு வந்தது ‘கட்டாய’ பாஸ்டேக் முறை; அட்டை இல்லை என்றால்… டபுள் வசூல்!

fastag
fastag

தமிழகம் உட்பட நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளைக் கடக்க வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் முறையில் சுங்கக் கட்டணம் செலுத்தும் முறை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. அட்டை இல்லாத வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணம் வசூல் செய்யப் படும் என்ற அறிவிப்பால், வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

அனைத்து வாகனங்களும் ‘ஃபாஸ்டேக்’ கட்டாயம் பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான காலஅவகாசத்தை நீட்டிக்குமாறு வாகன உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று, அரசும் இரு முறை காலக்கெடுவை நீட்டித்தது.

அதில், இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் பாஸ்டேக் கட்டாயம் என்று அறிவிக்கப் பட்டிருந்த நிலையில், வாகன் உரிமையாளர்களின் வேண்டுகோளை ஏற்று பிப்ரவரி 15ஆம் தேதி வரை காலக் கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட காலங்களில், சுங்கச்சாவடிகளில், பாஸ்டேக் வாகனங்களுக்கு அதிக வழிகளும், பணம் கொடுத்துச் செல்லும் வாகங்களுக்கு என ஒரு பிரத்யேக வழியும் என சுங்கச்சாவடிகளில் அமைக்கப் பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளிலும் நள்ளிரவு முதல் வாகனங்களுக்கு பாஸ்டேக் முறையில் சுங்கக் கட்டணம் செலுத்தும் முறை அமலுக்கு வந்துள்ளது. பாஸ்டேக் இல்லாமல் சுங்கச்சாவடிக்கு வரும் வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப் படும் என்றும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாகன ஓட்டிகள் பாஸ்டேக் பெறுவதற்கென அனைத்து சுங்கச்சாவடிகளுக்கும் அருகே முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இணையதளத்திலும் விண்ணப்பித்து பாஸ்டேக் பெற்றுக்கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories