December 5, 2025, 8:54 PM
26.7 C
Chennai

64 வயதிலும் காதல் வரும்! 58 வயது நபரோடு காதலர் தினத்தில் திருமணம் செய்த பெண்மணி!

Saraswathi-rajan-1
Saraswathi-rajan-1

தமிழ்நாட்டை சேர்ந்த 58 வயதான மணமகன் 64 வயது மணமகளை காதலர் தினத்தில் திருமணம் செய்த சம்பவம் கேரளாவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவர் தற்போது கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்திலுள்ள அடூரிலுள்ள மகாத்மா ஜனசேவனா கேந்திராவில் வசித்து வருகிறார். இவருக்கு வயது 58. சரஸ்வதி என்பவரும் அதே இடத்தில் வசித்து வந்தார். இவருக்கு வயது 64.

இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்து வந்தனர். சரஸ்வதியை விட ராஜன் 6 வயது குறைந்தவர். ராஜனின் சொந்த ஊர் திருச்சி. இவர் பத்தனம் திட்டாவிலுள்ள பல ஹோட்டலில் சமையல்காரராக பணி செய்து வந்தார்.

சபரிமலை சீசன் வந்துவிட்டால் பம்பாவில் ராஜனை காண முடியும். கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த மையத்தில் வந்து தங்கினார். தற்போது, இந்த மையத்தில் முதியோர்களை பராமரித்து அவர்களுக்கு உணவு சமைக்கும் பணியை ராஜன் தான் செய்து வருகிறார்.

சரஸ்வதியின் பெற்றோர் இறந்து போன நிலையில் 3 ஆண்டுகளாக அவர் இந்த மையத்தில் தங்கியிருகிறார். இந்நிலையில், ராஜனுக்கும் சரஸ்வதிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இருவரும் சேர்ந்து தங்களின் காதலை பற்றி மையத்தில் உள்ள நிர்வாகிகளிடம் தெரிவித்தனர்.

மையத்தில் உள்ள நிர்வாகிகள் இவர்களின் காதலுக்கு எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அதே சமயம் இந்த வயதில் காதலா? என்று கேலி செய்யவும் இல்லை. மாறாக இருவருக்கும் நல்லபடியாக திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அவர்களின் திருமணத்துக்கு பின் மையத்தின் அருகிலேயே அவர்களுக்கென்று தனியாக வீடும் கொடுத்தனர்.

இந்நிலையில், காதலர் தினம் அன்று ராஜன்- சரஸ்வதிக்கு அடூர் எம்.எல்.ஏ கோபக்குமார் தலைமையில் திருமணம் நடை பெற்றது. எம்.எல்.ஏ ராஜன் கையில் தாலி எடுத்து கொடுத்தார். மேலும் விழாவிற்கு வந்த நண்பர்கள் புதுமண தம்பதியை மனதார வாழ்த்தினர்.

இதை பற்றி கூறிய அந்த தம்பதி “எங்களுக்கென்று யாரும் இல்லாத காரணத்தால் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். எங்களை யாரும் கேலி செய்யவில்லை. எல்லோரும் சேர்ந்து வாழ எங்களை ஊக்கப்படுத்தினர்” என்று கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories