64 வயதிலும் காதல் வரும்! 58 வயது நபரோடு காதலர் தினத்தில் திருமணம் செய்த பெண்மணி!

Saraswathi-rajan-1
Saraswathi-rajan-1

தமிழ்நாட்டை சேர்ந்த 58 வயதான மணமகன் 64 வயது மணமகளை காதலர் தினத்தில் திருமணம் செய்த சம்பவம் கேரளாவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவர் தற்போது கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்திலுள்ள அடூரிலுள்ள மகாத்மா ஜனசேவனா கேந்திராவில் வசித்து வருகிறார். இவருக்கு வயது 58. சரஸ்வதி என்பவரும் அதே இடத்தில் வசித்து வந்தார். இவருக்கு வயது 64.

இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்து வந்தனர். சரஸ்வதியை விட ராஜன் 6 வயது குறைந்தவர். ராஜனின் சொந்த ஊர் திருச்சி. இவர் பத்தனம் திட்டாவிலுள்ள பல ஹோட்டலில் சமையல்காரராக பணி செய்து வந்தார்.

சபரிமலை சீசன் வந்துவிட்டால் பம்பாவில் ராஜனை காண முடியும். கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த மையத்தில் வந்து தங்கினார். தற்போது, இந்த மையத்தில் முதியோர்களை பராமரித்து அவர்களுக்கு உணவு சமைக்கும் பணியை ராஜன் தான் செய்து வருகிறார்.

சரஸ்வதியின் பெற்றோர் இறந்து போன நிலையில் 3 ஆண்டுகளாக அவர் இந்த மையத்தில் தங்கியிருகிறார். இந்நிலையில், ராஜனுக்கும் சரஸ்வதிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இருவரும் சேர்ந்து தங்களின் காதலை பற்றி மையத்தில் உள்ள நிர்வாகிகளிடம் தெரிவித்தனர்.

ALSO READ:  மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்! 

மையத்தில் உள்ள நிர்வாகிகள் இவர்களின் காதலுக்கு எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அதே சமயம் இந்த வயதில் காதலா? என்று கேலி செய்யவும் இல்லை. மாறாக இருவருக்கும் நல்லபடியாக திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அவர்களின் திருமணத்துக்கு பின் மையத்தின் அருகிலேயே அவர்களுக்கென்று தனியாக வீடும் கொடுத்தனர்.

இந்நிலையில், காதலர் தினம் அன்று ராஜன்- சரஸ்வதிக்கு அடூர் எம்.எல்.ஏ கோபக்குமார் தலைமையில் திருமணம் நடை பெற்றது. எம்.எல்.ஏ ராஜன் கையில் தாலி எடுத்து கொடுத்தார். மேலும் விழாவிற்கு வந்த நண்பர்கள் புதுமண தம்பதியை மனதார வாழ்த்தினர்.

இதை பற்றி கூறிய அந்த தம்பதி “எங்களுக்கென்று யாரும் இல்லாத காரணத்தால் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். எங்களை யாரும் கேலி செய்யவில்லை. எல்லோரும் சேர்ந்து வாழ எங்களை ஊக்கப்படுத்தினர்” என்று கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories