64 வயதிலும் காதல் வரும்! 58 வயது நபரோடு காதலர் தினத்தில் திருமணம் செய்த பெண்மணி!

Saraswathi-rajan-1
Saraswathi-rajan-1

தமிழ்நாட்டை சேர்ந்த 58 வயதான மணமகன் 64 வயது மணமகளை காதலர் தினத்தில் திருமணம் செய்த சம்பவம் கேரளாவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவர் தற்போது கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்திலுள்ள அடூரிலுள்ள மகாத்மா ஜனசேவனா கேந்திராவில் வசித்து வருகிறார். இவருக்கு வயது 58. சரஸ்வதி என்பவரும் அதே இடத்தில் வசித்து வந்தார். இவருக்கு வயது 64.

இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்து வந்தனர். சரஸ்வதியை விட ராஜன் 6 வயது குறைந்தவர். ராஜனின் சொந்த ஊர் திருச்சி. இவர் பத்தனம் திட்டாவிலுள்ள பல ஹோட்டலில் சமையல்காரராக பணி செய்து வந்தார்.

சபரிமலை சீசன் வந்துவிட்டால் பம்பாவில் ராஜனை காண முடியும். கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த மையத்தில் வந்து தங்கினார். தற்போது, இந்த மையத்தில் முதியோர்களை பராமரித்து அவர்களுக்கு உணவு சமைக்கும் பணியை ராஜன் தான் செய்து வருகிறார்.

சரஸ்வதியின் பெற்றோர் இறந்து போன நிலையில் 3 ஆண்டுகளாக அவர் இந்த மையத்தில் தங்கியிருகிறார். இந்நிலையில், ராஜனுக்கும் சரஸ்வதிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இருவரும் சேர்ந்து தங்களின் காதலை பற்றி மையத்தில் உள்ள நிர்வாகிகளிடம் தெரிவித்தனர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

மையத்தில் உள்ள நிர்வாகிகள் இவர்களின் காதலுக்கு எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அதே சமயம் இந்த வயதில் காதலா? என்று கேலி செய்யவும் இல்லை. மாறாக இருவருக்கும் நல்லபடியாக திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அவர்களின் திருமணத்துக்கு பின் மையத்தின் அருகிலேயே அவர்களுக்கென்று தனியாக வீடும் கொடுத்தனர்.

இந்நிலையில், காதலர் தினம் அன்று ராஜன்- சரஸ்வதிக்கு அடூர் எம்.எல்.ஏ கோபக்குமார் தலைமையில் திருமணம் நடை பெற்றது. எம்.எல்.ஏ ராஜன் கையில் தாலி எடுத்து கொடுத்தார். மேலும் விழாவிற்கு வந்த நண்பர்கள் புதுமண தம்பதியை மனதார வாழ்த்தினர்.

இதை பற்றி கூறிய அந்த தம்பதி “எங்களுக்கென்று யாரும் இல்லாத காரணத்தால் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். எங்களை யாரும் கேலி செய்யவில்லை. எல்லோரும் சேர்ந்து வாழ எங்களை ஊக்கப்படுத்தினர்” என்று கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories