இந்த ஆப் எல்லாம் இருந்தா.. ஆப்பு! எச்சரிக்கும் சைபர் கிரைம்!

Published:

cell phone
cell phone

நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியாக துன்புறுத்த சில செல்போன் செயலிகள் பயன்படுத்தப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியே வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள்.

பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் தினமும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.

அவ்வாறு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியாக துன்புறுத்த பயன்படுத்தப்படும் சில செல்போன் செயலி குறித்து சைபர் புலனாய்வு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி, ஐஎம்வியு என்ற செயலி பாலியல் வக்கிர குணம் கொண்டவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. விஸ்பர், கிக்ஸ் ஆப் செயலிகள் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.

டிண்டர் டேட்டிங் செயலி, ஓகேகியூபிட், சாட்ஸ்பின் ஆகிய செயலிகள் குழந்தைகளுக்கு ஆபத்து நேருவதாக தெரிவித்துள்ளார்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img