December 5, 2025, 1:49 PM
26.9 C
Chennai

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பு!

doller vs srilankan rupee
doller vs srilankan rupee
  • இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பு
  • திரிகோணமலை எண்ணெய் கிடங்குகளைதிரும்பப் பெறுகிறது இலங்கை

சீனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் இலங்கையிலும் இந்தியாவின் தீபகற்ப கடற்பரப்பிலும் மறைமுகமாக அதிகரித்து வருவது நல்லதல்ல. கொழும்பு துறைமுகம் கிழக்கு முனையம் ஹம்பந்தொட்டா துறைமுகம் 99 ஆண்டுகள் குத்தகையில் இந்தியப் பெருங்கடலில் சீனாவினுடைய போர் கப்பல்கள், வியாபாரக் கப்பல்கள், பட்டு வழி சாலை, ராமேஸ்வரத்திலிருந்து 50 கிமீ தொலைவில் சீனாவுக்கு காற்றாலை அமைக்க உரிமங்கள், இலங்கை வடக்கு கிழக்கு மாகாணங்களில் சீன நிறுவனங்களுக்கு நிலங்கள், நேற்றைக்கு வந்த செய்தி கிளிநொச்சி மாவட்டம் பாளையத்தில் பல ஏக்கர் நிலங்களை சீன நிறுவனத்துக்கு சிங்கள அரசு வழங்கியுள்ளது. யாழ்பாணம் கரைநகர் பகுதியில் பல ஏக்கர்கள் நிலங்களில் கடற்படை தளம் அமைக்கவும், அதுபோல நீலாங்காட்டுப் பகுதியிலும் தமிழர்களுடைய நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. இது எங்கே போய் முடியுமோ…?

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை நிறுவ, இந்தியா-இலங்கை-ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனால், திடீரென அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக ராஜபக்சே சகோதரர்கள் தலைமையிலான அரசு தெரிவித்தது. இந்தியாவும் ஜப்பானும் கடும் அதிருப்தியை வெளியிட்டும், தனது முடிவை மாற்றிக்கொள்ள இலங்கை தயாரில்லை.

இந்நிலையிலேயே, இந்தியா வசம் இருக்கும் திரிகோணமலை எரிபொருள் எண்ணெய் சேமிப்பு கிடங்குகளையும் திரும்பப் பெறுவதென இலங்கை அரசு புதிய முடிவு எடுத்துள்ளது.

திரிகோணமலை யார் வசம் இருக்கிறதோ அவர்களே தெற்காசியாவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்கிற அளவுக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம் திரிகோணமலை. இந்த திரிகோணமலையில் 2-ஆம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட எரிபொருள் எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் ஏராளம் உள்ளன. இதில் ஒரு பகுதியை இவ்வளவு காலமும், இந்தியாதான் பயன்படுத்தி வந்தது. ஆனால், இனிமேல் அவற்றை தாங்களே வைத்துக் கொள்வோம் என்று இலங்கை கூறியிருக்கிறது.

  • கே.எஸ்.இராதாகிருஷ்ணன் (செய்தித் தொடர்பாளர், திமுக.,)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories