கால்வான் கைகலப்பு; 4 வீரர்கள் உயிரிழந்ததாக சீனா வெளியிட்ட காட்சிக் ‘கணக்கு’!

indo-china-galwan1
indo-china-galwan1

கால்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய – சீன ராணுவத்துக்கு இடையே நிகழ்ந்த மோதல் காட்சியின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது சீன ஊடகம். அந்தக் காட்சியில் தங்கள் தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்ததாகவும், அவர்களின் தியாகத்தை மதிப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய – சீன ராணுவத்தினருக்கு இடையே மோதல் உருவானது. இந்திய ராணுவத்தினரின் பக்கத்தில் திடீர் என புகுந்து, கம்பிகள், முள்கம்பிகள், கட்டைகள் கற்களால் சீன ராணுவத்தினர் தாக்கியதாகவும், அவர்களின் தாக்குதலை எதிர்கொண்டு, கைகளாலே திருப்பித் தாக்கி, சீன ராணுவத்தைச் சேர்ந்த 45க்கும் அதிகமானோரை இந்திய ராணுவத்தினர் கொன்றதாகவும் செய்திகள் வெளியாகின. 

ஆனால் இதனை சீனா மறுத்து வந்தது. தங்கள் நாட்டைச் சேர்ந்த வீரர்கள் மரணம் குறித்து எந்த விதத் தகவலும் அது தெரிவிக்கவில்லை. ஆனால் இது குறித்து சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகி, சீனாவின் வாய்மூடிய மௌனத்துக்கு பங்கம் விளைவித்துக் கொண்டிருந்தன. 

indo-china-galwan
indo-china-galwan

இந்தியா தனது தரப்பில், இந்த மோதலில் 20 பேர் உயிர்த் தியாகம் செய்ததாக அறிவித்து, அவர்களின் தியாகத்துக்கு உரிய மரியாதையைச் செய்தது என்று சர்வதேச ஊடகங்கள் இந்தியாவின் செயலைப் பாராட்டின. அதே நேரம், இரும்புத் திரையிடப் பட்ட கம்யூனிஸ சீனா, தனது நாட்டு ராணுவத்தினரின் உயிரிழப்பைக் கூட மூடி மறைத்து அவர்களின் உயிர்த் தியாகத்தை கொச்சைப் படுத்துகிறது என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டப்பட்டது. 

இந்த நிலையில்,  சர்வதேச ஊடகங்களின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், இரு நாட்டு எல்லையில் வீரர்கள்  மோதிக்கொண்டது தொடர்பான வீடியோ காட்சியை சீன ஊடகம் வெளியிட்டுள்ளது. 

நீர்நிலை ஒன்றின் அருகே இரு தரப்பைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள் திரண்டு இருப்பதும், சீன வீரர்களை இந்திய வீரர்கள் துணிச்சலுடன் எதிர்கொண்டு அத்துமீறி உள்ளே வர விடாமல் தடுக்கும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.

மேலும், இந்தத் தாக்குதலில் தங்களது தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்ததாக சீனா அறிவித்திருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

Topics

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Entertainment News

Popular Categories