மாட்டுச் சாணம்… பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள்! எங்கு தெரியுமா?

Published:

cow dong cctv camera - 2026
  • மாட்டு சாணம் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள். எங்கு தெரியுமா?
  • ஆம். நீங்கள் படிப்பது உண்மைதான். மாட்டு சாணத்திற்கு இருக்கும் டிமாண்ட் அப்படி.
  • இது வேறு எங்கோ அல்ல. நம் நாட்டின் நடு மாநிலமான சட்டீஸ்கரில் தான்.

சட்டிஸ்கர் அரசாங்கம் 2020 ல் கோதான் நயா யோஜன் என்ற திட்டத்தை அமல்படுத்தியது. இந்த திட்டத்தின்படி அரசாங்கமே விவசாயிகள் மற்றும் கோசாலைகளிலிருந்து மாட்டு சாணத்தை இரண்டு ரூபாய் ஒரு கிலோ என்று வாங்குகிறது.

இவ்வாறு கிராமங்களில் இருந்து மாட்டு சாணத்தை சேகரித்து உதவி சங்கங்கள் மூலம் வர்மி கம்போஸ்ட் ஆக தயாரித்து விவசாயிகளுக்கு விற்கிறது. இதற்காக உதவி சங்கங்களுக்கு கடன் கூட அளித்துள்ளது.

இதனால் சத்தீஸ்கரில் மாட்டு சாணத்திற்கு டிமாண்ட் அதிகமாக பெருகி உள்ளது. இதனால் தான் அங்கு மாட்டு சாணம் மிகவும் மதிப்பு வாய்ந்த பொருளாக மாறிவிட்டது. அனைவரும் திருடும் நிலை ஏற்பட்டுள்ளதால் அங்கு சிசிடிவி கேமராக்களை பொருத்தவேண்டி வந்துள்ளது.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

அம்பிகாபூர் முனிசிபாலிட்டியில் அரசாங்க கோதான் நிலையத்திலிருந்து மாட்டு சாணத்தை திருடிச் சென்ற 5 பெண்கள் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து 45 கிலோ சாணத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

இவ்வாறு திருட்டு அதிகரித்து வருவதால் கோதான் நிலையங்களில் பாதுகாப்புக்காக கட்டுதிட்டமான ஏற்பாடு செய்துள்ளார்கள். கோதான் நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி உள்ளார்கள். அதேபோல் பாதுகாப்பு ஊழியர்களையும் நியமிக்க உள்ளார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img