இலங்கையில் பாரதிய ஜனதா கட்சி தொடக்கம்! ஆனால்…

srilanka bjp - 2026

இலங்கையில் பாரதிய ஜனதா கட்சி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் உள்ள பாரதிய ஜனதாக் கட்சிக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று, அக்கட்சியின் தலைவர் முத்துசாமி, கட்சி அறிமுக நிகழ்வின் போது கூறினார்.

நம் அண்டை நாடான இலங்கையில் ஸ்ரீலங்கா பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்று தொடங்கப் பட்டுள்ளது. இக்கட்சியின் தொடக்கம் குறித்த அறிமுக நிகழ்வு, ஊடக சந்திப்பு இரு தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா பாஜக., குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய அக் கட்சியின் தலைவர் வி.முத்துசாமி, இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியதில் மகிழ்ச்சி அடைகிறோம். இலங்கையில் தமிழ் மக்களை முன்னிலைப் படுத்தி, பல கட்சிகள் உள்ளன. இருந்தாலும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை அக்கட்சிகள் புறம் தள்ளி விடுகின்றன. தமிழர்களின் நலனுக்காகவே இலங்கை பாரதிய ஜனதா கட்சியை தொடங்கியுள்ளோம்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

ஆனால் எங்களுக்கும், இந்தியாவில் உள்ள பாரதிய ஜனதா கட்சிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. தமிழர்களுக்கான கல்வி பொருளாதார மேம்பாடு, விளையாட்டு, கலாசார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம் என்று அவர் இந்த நிகழ்வின் போது தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பாரதிய ஜனதா கட்சியின் செயலராக எம்.இந்திரஜித், பொருளாளராக திலான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, இந்தியாவில் இது குறித்த பரபரப்பான செய்திகள் பரவியிருந்தன. இந்தியா மட்டுமின்றி இலங்கை, நேபாளம் ஆகிய அண்டை நாடுகளிலும் பாஜக., ஆட்சி அமையும், அதற்கான திட்டம் உள்துறை அமைச்சர் அமித் ஷா கையில் உள்ளது என்று பாஜக.,வைச் சேர்ந்த திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ் அண்மையில் கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இலங்கையில் பாரதிய ஜனதா கட்சி கிளை தொடங்கப்படும் என்று பரபரப்பான தகவல்கள் உலா வந்த நிலையில், இலங்கையில் உள்ள சிவசேனா அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் அதுகுறித்து குறிப்பிட்டபோது, இலங்கையில் உள்ள பெரும்பாலான கட்சிகள் இந்தியாவில் உள்ள கட்சிகளின் சுவடுகளை தாங்கியே தொடங்கப்பட்டு இருக்கின்றன. காங்கிரஸ் உள்ளிட்ட பெயர்களில் கட்சிகள் உண்டு. ஜனதா பெயரிலும் கட்சிகள் உள்ளன. இந்தியாவில் இந்து மக்களுக்கு அரணாக பாரதிய ஜனதா கட்சி திகழ்கிறது. அது போன்ற ஒரு கட்சி இலங்கைக்கும் தேவை என்பதால் அத்தகைய பெயரை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று குறிப்பிட்டார்  

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் ஸுக்கு உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. ஹிந்து ஸ்வயம்சேவக் சங்கம் என்ற பெயரில் உலகில் பல்வேறு இடங்களில் கிளைகள் நடைபெற்று வருகின்றன.. அந்த அமைப்பின் கனவான அகண்ட பாரதம் என்ற எண்ணம் சாத்தியமாக இதுபோன்ற நடவடிக்கைகள் தேவை என்று பலரும் கருத்து தெரிவித்தனர் இந்நிலையில் இலங்கையில் அரசியல் அமைப்பாக இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற ஒன்று தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

Entertainment News

Popular Categories