December 5, 2025, 9:34 PM
26.6 C
Chennai

முக கவசம் இல்லைன்னா ரூ.200 அபராதம்: மக்கள் ஒத்துழைக்கணும்!

mask

மதுரை மாவட்டத்தில் கோவிட்-19 தொற்று ஏற்படாமல் இருக்க பொது மக்கள் நலன் கருதி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா நோய்தொற்று பரவலை கட்டுப்பட்டுத்தும் வகையில் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 30.04.2021 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தற்போது மகாராஷ்டிரா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா நோய் தொற்று அதிகளவில் பரவி வருகிறது.
மேற்படி மாநிலங்களில் இருந்து வரும் நபர்களின் மூலமாக நோய் பரவலை தடுக்கும் வகையில், மேற்படி மாநிலங்களிருந்து தமிழகத்திற்கு வரும் நபர்களுக்கு இ-பாஸ் நடைமுறை மீண்டும் தமிழக அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது நமது மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. எனவே கொரோனா நோய் தொற்று இரண்டாவது அலை வீசுவதற்கு வாய்ப்புள்ளது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே பொதுமக்கள் அரசின் நேர்மையான நோக்கங்களை புரிந்து கட்டாயம் முகக்கவசம் அணியவும், அடிக்கடி கை கழுவவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். மேலும் கண்டிப்பாக கூட்டம் கூட கூடாது என்பதையும், கூட்டமான இடங்களுக்கு செல்லமால் தவிர்க்க வேண்டும் என்று அறிவிக்கப்படுகிறது.

பொது மக்கள் மேற் குறிப்பிட்டுள்ள நடவடிக்கைகளை கவனமாகவும், கண்டிப்பாகவும் பின்பற்றுதல் அவசியமாகிறது. இது எச்சரிக்கை இருக்க வேண்டிய காலமாக அமைகிறது.

மேலும் பொதுமக்கள் கொரோனா நோய் தொற்று அறிகுறிகளான காய்ச்சல், இருமல், சளி, மூச்சிரைப்பு ஆகியவை தென்படும் பட்சத்தில் உடன் அருகில் உள்ள மாநகராட்சி காய்ச்சல் முகாம்கள், நகர்புற சுகாதார நிலையங்கள், ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பொது சுகாதார துறையினரால் நடத்தப்படும் காய்ச்சல் முகாம்களுக்கு சென்று கொரோனா நோய் தொற்று பரிசோதனை செய்துக்கொள்வதுடன் மருத்துவர் ஆலோசனையின்படி, உடன் தனிமைப்படுத்திக்கொள்ள பொது மக்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது 1939 வருடத்திய பொது சுகாதார சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்ட பிரிவு 51-இன் கீழ் அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் இனி வருங்காலங்களில் எவரேனும் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதத் தொகை ரூ.200- விதிக்கப்படும் என இதன் மூலம் எச்சரிக்கை செய்யப்படுகிறது.

பொது இடங்களில் முகக்கவசம் மற்றும் வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளி பின்பற்றாமையை கண்டறிந்து உடன் அபராதத் தொகை விதிக்க சுகாதாரத்துறை, காவல்துறை, உள்ளாட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் பொது இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.த.அன்பழகன் இ.ஆ.ப., கேட்டுக்கொண்டிருக்கிறார்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories