February 22, 2026, 12:00 PM
29.6 C
Chennai

ரஸ்க் சாப்பிடறதுல இவ்வளவு ரிஸ்கா..?😳

rask
rask

ரஸ்க் தொழிற்சாலை ஒன்றில் ஊழியர் ஒருவர் ரஸ்க்குகளை பாக்கெட்டில் பேக் செய்யும் பொழுது அதை காலால் மிதித்து நாவால் நக்கும் வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்த வீடியோவில், ஊழியர் தட்டில் வைக்கப்பட்டுள்ள ரஸ்க்குகளை காலால் மிதித்தும், அதை பாக்கெட்டில் அடைக்கும் போது நாவால் நக்கியும் அடைக்கிறார். அந்த ரஸ்க்குகள் மீது அவர் காலை வைத்து அடுக்குகிறார். இதைப் பார்க்கும்போது அவர் இந்த விஷயத்தை வேண்டுமென்றே செய்கிறார் என்பது இந்த வீடியோவில் தெரிகிறது.

இதையடுத்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதையடுத்து நெட்டிசன்கள் ஊழியரின் செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் இவரை சிறையிலடைக்க வேண்டும் என்றும் குரல் எழுப்பி வருகின்றனர்.

இதனை அடுத்து, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ரஸ்க் தயாரிப்பு நிறுவனங்களில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பிரபாவதி தலைமையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி வேல்முருகன் தலைமையிலான குழுவினர் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

rask 2
rask 2

ஆய்வின்போது, சுகாதாரமற்ற முறையில் தயார் செய்யப்பட்ட சுமார் 300 கிலோ ரஸ்க் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, அங்கு பணிபுரிந்த வடமாநில தொழிலாளர்களின் கைகளை சுத்தமாக வைத்து பணி செய்யவும், முகக் கவசம் அணியவும், தடுப்பூசி அவசியம் அனைவரும் போட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். பின்னர், மற்றொரு ரஸ்க் கம்பெனியில் நடத்திய சோதனையில், அங்கு சுகாதாரமற்ற முறையில் ரஸ்க் தயாரிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், உடனடியாக ஊழியர்களை வெளியேற்றி அந்த கம்பெனியை தற்காலிகமாக மூடினர்.

இதேபோல், காரைக்குடியில் உள்ள உணவகங்கள் மற்றும், இறைச்சிக் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருச்சி சாலையில் உள்ள பிரபல உணவகத்தில் கெட்டுப்போன 50 கிலோ புரோட்டா மாவு மற்றும் இறைச்சி பறிமுதல் செய்தனர். மேலும், கோழி கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தரம் குறைந்த 50 கிலோ இறைச்சியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

https://youtu.be/qPXaVXidcU4

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories