கருப்பு பூஞ்சை பாதித்தவர்களுக்கு அவஸ்குலர் நெக்ரோசிஸ்! மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்!

eye - 2026

மும்பையில் கருப்பு பூஞ்சை பாதித்த 3 கொரோனா நோயாளிகளில் ‘எலும்பு மரணம்’ என்ற புதிய நோய்த் தொற்று பதிவாகியிருப்பதாக இந்துஜா மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மும்பையில் கருப்பு பூஞ்சை நோய்தொற்றுக்கு சிகிச்சை எடுத்து வந்த 3 பேருக்கு சிகிச்சைக்கு பின்னர் “அவஸ்குலர் நெக்ரோசிஸ் (ஏ.வி.என்) என்ற இறந்த எலும்பு திசுக்கள் (எலும்பு மரணம்) ” என்ற புதிய நோய் தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான ஒரு அறிக்கையின்படி,மும்பையில் உள்ள மஹிம், இந்துஜா மருத்துவமனை, கோவிட் சிகிச்சை பெற்ற மூன்று 40 வயதுக்குட்பட்ட நோயாளிகளுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ‘இறந்த எலும்பு திசுக்கள்’ நோய் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,இது குறித்து,மஹிம், இந்துஜா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் சஞ்சய் அகர்வாலா கூறுகையில்:”இந்த நோயாளிகளுக்கு அவர்களின் தொடை எலும்பில் கடுமையான வலி ஏற்பட்டது, அவர்கள் மருத்துவர்களாக இருந்ததால், அவர்கள் அறிகுறிகளை அடையாளம் கண்டு விரைவில் சிகிச்சை எடுத்தக் கொண்டனர்.

ஏ.வி.என் மற்றும் மியூகோமைகோசிஸுக்கு இடையிலான பொதுவான காரணங்கள் ஸ்டெராய்டுகளின் பயன்பாடு ஆகும்.

காரணம், இது கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படும் ஒரே மருந்து ஆகும். டாக்டர் அகர்வாலாவின் ஆய்வுக் கட்டுரை படி கொரோனா தொற்றிலிருந்து உயிர் காக்கும் ஸ்டீராய்டுகளை பெரிய அளவில் பயன்படுத்துவதால், ஏவிஎன் நோய்த்தொற்று பாதிப்புகள் மீண்டும் எழும்” என்று அவர் கூறினார்.

இதனால், கொரோனா பாதித்தவர்களுக்கு ஏ.வி.என் அடுத்த புதிய நோய் பரவல் நிலையாக இருக்கலாம் என்றும், அடுத்த சில மாதங்களில் ஏ.வி.என் நோய்த்தொற்றுகள் அதிகளவில் ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் அஞ்சுகிறார்கள்.

இதற்கிடையில், கோயம்புத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில், மியூகோமிகோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட 264 நோயாளிகளில் 30 பேர் ஒரே கண்ணில் பார்வை இழந்துவிட்டதாக மருத்துவமனையின் உயர் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.

மேலும், அனுமதிக்கப்பட்ட அனைவருமே கண் அறுவை சிகிச்சையுடன் எண்டோஸ்கோபிக்கு உட்படுத்தப்பட்டதாகவும், ஆனால் கடுமையான தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட 30 நோயாளிகள் ஒரு கண்ணில் பார்வை இழந்துவிட்டனர்.

எனினும், ஆரம்ப கட்டத்தில் வந்தவர்களுக்கு இந்த நோயை முழுவதுமாக குணப்படுத்தியதாக அம்மருத்துவமனை டீன் டாக்டர் என் நிர்மலா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் சதானந்த கவுடா அவர்கள்,மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் (யூ.டி.) மற்றும் மத்திய நிறுவனங்களுக்கு ஆம்போடெரிசின்-பி கூடுதல் 2,12,540 குப்பிகளை அரசு ஒதுக்கியுள்ளது என்று சமீபத்தில் தெரிவித்தார்.

கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சையளிக்க ஆம்போடெரிசின்-பி பயன்படுத்தப்படுகிறது. இதனால், இவை மூக்கு, கண்கள், சைனஸ்கள் மற்றும் சில நேரங்களில் மூளைக்கு கூட சேதம் விளைவிக்கும்.

கடுமையான மற்றும் மோசமான நோய்வாய்ப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சையான ஸ்டெராய்டுகளைப் பயன்படுத்துவதன் மூலம் மியூகோமைகோசிஸ் மற்றும் இறந்த எலும்பு திசுக்கள் நோய் தூண்டப்படலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

Topics

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

இருபெரும் திராவிடக் கழகங்களை தேர்தலில் வீழ்த்தி ஆட்சி அமைத்துள்ள த.வெ.க இந்த உணர்வைப் பின்பற்றி ஆட்சி செய்யவேண்டும், மத்திய மாநில உறவுகளைப் பேணவேண்டும்

பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு தவிர்க்க வேண்டும்; பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி திடீர் வேண்டுகோள்

Entertainment News

Popular Categories