பாஜக., பேனர் கட்டினா தப்பு! திமுக.,ன்னா ஸ்டிக்கர்… போஸ்டரே ஒட்டலாம்! அதுவும் கோயிலில்!

ilanji temple - 2026

இலஞ்சி கோவிலில் அத்துமீறல்! இந்துக்களை மீண்டும் மீண்டும் சீண்டும் திமுக?!

தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள பிரசித்திபெற்ற திருவிலஞ்சிக் குமாரர் கோவிலின் சுற்றுச்சுவர் மட்டுமல்லாது கோயிலின் நுழைவு வாயிலிலேயே அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவை வரவேற்று திமுகவினர் ஒட்டியிருக்கும் திடீர் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது…

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஒருமுறைகூட இதைப்போன்று கோவில் புனிதத்தை கெடுக்கும் வகையில் அதிமுகவினர் நடந்து கொண்டது கிடையாது, திமுக வந்ததும்தான் இப்படிப்பட்ட அநியாயங்கள் நடைபெறுகின்றன என்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்…

ilanji temple2 - 2026

இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் அளித்தால், அமைச்சர் தென்காசி மாவட்டத்திற்கு ஆய்வுப் பணிக்கு வருவதால் அவரை வரவேற்று திடீரென திமுகவினர் சிலர் வந்து இப்படி போஸ்டர் ஒட்டிவிட்டு சென்றுவிட்டதாகவும், அதை அகற்ற முற்பட்டால் அமைச்சர் வரும் வேளையில் தேவையற்ற பிரச்சினையை திமுகவினர் உண்டாக்கிவிடுவார்கள் என்ற பயத்தினால் அகற்றாமல் வைத்திருக்கிறோம், அமைச்சர் வந்து சென்றபின் அகற்றிவிடுகிறோம் என்று பதிலளிக்கிறார்கள்!

அமைச்சர் மட்டுமல்ல முதல்வரே வந்தாலும் அவரை வரவேற்று கோவில் சுவரில் கட்சி போஸ்டர் ஒட்டுவது குற்றம் என்று தெரிந்திருந்தும், தென்காசி கோவிலில் ஆய்வு நடத்த வரும் அமைச்சரை வரவேற்க சம்பந்தமே இல்லாமல் இலஞ்சி கோவிலில் போஸ்டர் ஒட்டுவது அராஜகம் என்று தெரிந்திருந்தும், நடவடிக்கை எடுத்தால் தங்கள் வேலை பறிபோய்விடும் என்று அரசு ஊழியர்கள் பயப்படும் அளவிற்கு படுமோசமான காட்டாட்சியை திமுக நடத்திக் கொண்டிருக்கிறதா எனக் கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்…

ALSO READ:  பிஜேபி., உள்ள வந்துடும்!

அறநிலையத்துறை அமைச்சரை வரவேற்க கோவில் வாசலில் போஸ்டர் ஒட்டும் திமுககாரர்கள், நீதித்துறை அமைச்சரை வரவேற்க நீதிமன்ற வாசலிலும், வருவாய் துறை அமைச்சரை வரவேற்க கலெக்டர் அலுவலக வாசலிலும், காவல்துறையின் அமைச்சரான முதல்வரை வரவேற்க அனைத்து காவல் நிலையங்களிலும் கட்சி போஸ்டர் ஒட்டுவார்களா? ஒரு குறிப்பிட்ட மதத்தினரை பார்த்தால் மட்டும் திமுகவினருக்கு ஏன் இவ்வளவு இளக்காரமாக தெரிகிறது?!

எப்போதுமே இந்து தெய்வங்களையும், அவர்களது வழிபாட்டு முறைகளையும் இழிவாக பேசுவதை இன்பமாக நினைத்து அதை செய்து கொண்டிருந்தவர்கள், திடீரென தேர்தல் நேரத்தில் மட்டும் ‘வேலை’ கையில் தூக்கி நாடகம் ஆடியதையெல்லாம் நம்பி மக்கள் திமுகவுக்கு வாக்களிக்கிறார்கள் என்றால், கோவில் நுழைவாயிலில் மட்டுமா? கோவிலுக்கு செல்பவர்கள் எல்லோரது முதுகிலும்கூட திமுகவினர் போஸ்டர் ஒட்டத்தான் செய்வார்கள்!

  • S.சிவஆனந்த், BE,MBA.,
    மதுரை மண்டல துணை செயலாளர், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு

தகவல் உதவி: குத்தாலபெருமாள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

Topics

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories