இந்து மதத்தை இழிவு படுத்திய முஸ்லிம் கட்சி நிர்வாகிகள் 4 பேர் மீது வழக்கு!

dindukkal hindumunnani1 - 2026

திண்டுக்கல்லில் இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக மநேமக நிர்வாகிகள் 4 மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது.

திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து, மத்திய அரசை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 14 வயது சிறுவன் ஒருவனின் உடல் முழுவதும் நாமம் போட்டு பாடை கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று காலை திண்டுக்கல் நகர் வடக்கு போலீசில் இந்துமுன்னணி மாவட்ட செயலாளர் வீரதிருமூர்த்தி, இந்து மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் தர்மா ஆகியோர் புகார் அளித்தனர்.

dindukkal hindumunnani - 2026

இந்தப் புகாரில், பேகம்பூரில் பெட்ரோல் மற்றும் டீசல் உயர்வை கண்டித்து முஸ்லிம்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், இந்து மதத்தை இழிவு செய்யும் விதமாக சிறுவனின் நெற்றி மற்றும் உடலில் நாமத்தை வரைந்து இந்துவாக அடையாளப்படுத்தி போராட்டத்தில் முன்னிறுத்தி உள்ளனர்.

இதைப் படமெடுத்து இந்துக்கள் மனதை புண்படுத்தும் நோக்கத்தோடு பரப்பியும் வருகின்றனர். முஸ்லீம் அமைப்பு நடத்தும் போராட்டத்தில் இந்து மதத்தை அடையாளப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. நடைபெற்ற இச்சம்பவம் திட்டமிட்டு இந்து மதத்தை கொச்சை படுத்துவதற்காக அரங்கேற்றப்பட்டுள்ளது.

இது இந்து, முஸ்லீம் கலவரத்தை தூண்டி சட்ட ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கும் முயற்சியாகும். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திண்டுக்கல் நகர் தெற்கு போலீசில் பள்ளப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் லோகநாதன் பேகம்பூரில் முஸ்லிம் அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இந்து மதத்தை இழிவுபடுத்துவது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தார். இது குறித்து நகர் தெற்கு இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் யாசர் அராபத், இப்ராஹிம், காதர் மற்றும் பொன்னுசாமி ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

Entertainment News

Popular Categories