December 6, 2025, 3:28 AM
24.9 C
Chennai

சிவன்மலை உத்தரவு பெட்டியில் பஞ்சாங்கம், ஆதார், ரூ.10 நாணயம் வைத்து வழிபாடு!

sivan malai - 2025

திருப்பூர் மாவட்டம் சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் தமிழ்ப் பஞ்சாங்கம், ஆதார் அட்டை, மணி, 10 ரூபாய் நாணயங்களை வைத்து பூஜை நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலானது கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டவன் உத்தரவு பெட்டி சிறப்பு வாய்ந்தது.

சுப்பிரமணிய சுவாமியின் பக்தர்களுக்கு கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளை உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்ய சுவாமி உத்தவிடுவார்.

இது போல் கனவில் உத்தரவு வந்தவர்கள் கோயில் நிர்வாகத்திடம் விவரங்களை கூறுவர். பின்னர் சுவாமியிடம் பூப்போட்டு கேட்டு அதில் உத்தரவு வந்தபின்னர் அந்த கனவில் சொன்ன பொருட்களை பெட்டியில் வைத்து பூஜை செய்வார்கள்.

sivan malai petti - 2025

இவ்வாறு கோயில் முன் மண்டப தூணில் வைத்துள்ள உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் ஏதும் கிடையாது. அடுத்த பொருள் பக்தரின் கனவில் உத்தரவு வரும் வரை அந்த பெட்டியில் பழைய பொருட்கள் இருக்கும்.

இதுபோல் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டுள்ள காலத்தில் அந்த பொருள் சமூகத்தில் ஏதாவது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அது பாசிட்டிவாகவும் இருக்கும் , நெகட்டிவாகவும் இருக்கலாம். இந்த நிலையில் கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த லதா சம்பத்குமாரின் கனவில்தான் இந்த உத்தரவு வந்துள்ளது.

அவரது கனவில் தமிழ் பஞ்சாங்கம், ஆதார் அட்டை, மணி, ரூ 10 நாணயங்கள் ஆகிய பொருட்களை வைத்து உத்தரவு பெட்டியில் சனிக்கிழமை வைத்து பூஜிக்கப்பட்டது.

பாம்பு பஞ்சாங்கமானது பாரம்பரியமிக்கது, நமது பாரத பாரம்பரியம் உயிர்ப்புடன் எழுச்சி பெறும். ஆதார் அட்டையின் மூலம் இந்த தேசத்தில் சட்டவிரோதமாக குடியேறி தங்கியுள்ளவர்களை வெளியேற்றும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது.

மணி என்பது கோயில்களில் ஒலிக்கக் கூடியது. இதனால் பக்தர்களும் நாட்டு மக்களும் சுபிட்சம் பெறுவார்கள். 10 ரூபாய் நாணயங்கள் பொருளாதாரத்தை குறிக்கும். நாட்டின் பொருளாதாரம் சிறப்புற்று விவசாயம், தொழில் துறை வளர்ச்சி பெறும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இந்தியா வல்லரசாக மாறும் என்பதையே இந்த பொருட்கள் உணர்த்துவதாக குறிப்பிடப்படுகிறது.

லதா சம்பத்குமார் தங்கள் வீட்டில் பஞ்சாங்கத்தை வைத்தால் வீட்டிற்கு நல்லது என கணவரிடம் கூறிவிட்டு தூங்க சென்ற போது வீட்டுக்கு நல்லது ஏற்பட்டால் போதாது, நாட்டுக்கும் நல்லது ஏற்பட வேண்டும் என முருகன் கனவில் தோன்றி கூறியதை அடுத்தே லதா கோயில் நிர்வாகத்திடம் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் கடந்த மே மாதம் முதல் வேப்பிலை, துளசி, வில்வம், அருகம்புல், விபூதி, மஞ்சள் தூள் வைத்து பூஜிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories