ஓரம்போ… ஓரம்போ… ஜோதிமணி வண்டி வருது!

karur jothimani - 2026

ஓரம்போ ஓரம்போ அக்கா எம்பி ஜோதிமணி வண்டி வருது…! என்று கூவிக் கொண்டு சைக்கிள் பேரணி நடந்தது. பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற அனுமதி இல்லாத சைக்கிள் பேரணியில் காங்கிரஸ் எம்பி., ஜோதிமணி ஓட்டிய சைக்கிளை பிடித்துக் கொண்டு ஓடிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அளவில் ஆங்காங்கே பல்வேறு கட்சியினர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தி வருகின்றனர். கரூரில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டு முறை பெட்ரோல் பங்குகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், இன்றும், கரூர் RMS தபால் நிலையம் முன்பாக, கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோஷ்டிப் பூசல் நிறைந்த காங்கிரஸ் கமிட்டியில், கரூரை அடுத்த தான்தோன்றிமலை பேருந்து நிறுத்தம் பகுதியில் காங்கிரஸ் கமிட்டி கரூர் மாவட்ட முன்னாள் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான சுப்பிரமணியம் தலைமையில் ஒரு புறம் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், மற்றொருபுறம் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

karur jothimani1 - 2026

கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சின்னசாமி முன்னிலை வகித்தார். அதில் சமூக இடைவெளி இல்லாமல் நோய்த்தொற்று பரப்பும் விதமாகவே ஆர்ப்பாட்டம் மற்றும் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதனைக் கண்டும் காணாதது போல் போலீசார் இருந்தனர். மேலும் அனுமதி இல்லாத சைக்கிள் பேரணி தொடங்கியது. இது குறித்தெல்லாம் கரூர் மாவட்ட ஆட்சியரும் கண்டு கொள்ளவில்லை.

இதில் பெயருக்காக தான் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்று நினைத்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, ஓர் இளைஞர் சைக்கிளைப் பிடித்துக் கொண்டு பின்னே ஓடி வர, சைக்கிளை ஓட்டிவந்தார் ஜோதிமணி.

karur jothimani2 - 2026

அப்போது, அக்கா வராங்க, ஓரம்போ என்ற பாணியில் சினிமா பாடலில் வரும் காட்சி… ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது, என்பது போல் ஓரம்போ ஓரம்போ கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வண்டி வருது என கரூர் நகரில் காங்கிரஸ் எம்பி., வலம் வந்தார்.

கொரோனா கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் நோய் பரப்பும் விதமாக ஒரே இடத்தில் சுமார் 50 நபர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் ஒருசேர சைக்கிள் பேரணி சென்றது இங்குள்ள பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories