February 20, 2026, 11:38 AM
30 C
Chennai

ஏழுமலையானுக்கு சாத்தப்படும் மலர் மாலைகள் கொண்டு அலங்கார, வாசனைப் பொருட்கள் தயாரிப்பு!

thirupathi 2
thirupathi 2

ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும் மலர்களை வர்த்தக ரீதியிலான பயன்பாட்டிற்கு கொண்டு செல்லும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை திருப்பதி தேவஸ்தானம் கையாள இருக்கிறது .

திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) பக்தர்களின் வசதிக்காக பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது . அந்த வகையில் ஏழுமலையான் மற்றும் திருமலை கோயில்களில் அணிவிக்கப்படும் நூற்றுக்கணக்கான மலர் மாலைகளைக் கொண்டு வாசனைத் திரவியங்கள் , அலங்காரப் பொருட்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்க திட்டமிடப்பட்டது .

வரும் 13 ஆம் தேதி ஒய் . எஸ் . ஆர் தோட்டக்கலை பல்கலைக்கழகத்துடன் திருப்பதி தேவஸ்தானம் முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளது . “Dry Flower Technology” யை பயன்படுத்தி அலங்காரப் பொருட்கள் , வாசனைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது .

Thirupathi
Thirupathi

இதுதொடர்பான கூட்டத்தில் பேசிய செயல் அதிகாரி ஜவகர் ரெட்டி உலர் மலர்களின் தொழில்நுட்பம் இயற்கையானதாவும் , சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமலும் , நீண்ட காலம் பயன்படுத்தும் வகையிலும் , அதிக செலவு பிடிக்காத தொழில்நுட்பமாகவும் திகழ்ந்து வருகிறது என்று கூறினார்.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மலர் கொத்துகள், பேப்பர் வெயிட்கள், லேமினேட் செய்யப்பட்ட சாமி படங்கள், அறையை புத்துணர்ச்சியூட்டும் வாசனை திரவியங்கள், கீ செயின்கள் உள்ளிட்டவற்றை அலங்கரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான பயிற்சியை திருப்பதியில் உள்ள சிட்ரஸ் ஆராய்ச்சி மையத்தில் பெண்களுக்கு தோட்டக்கலை பல்கலைக்கழகம் வழங்கவுள்ளது.

இந்த திட்டத்திற்காக 83 லட்ச ரூபாயை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒதுக்கீடு செய்யவுள்ளது. இவ்வாறு உருவாக்கப்படும் சுவாமி படங்கள் ஏழுமலையான் பக்தர்களுக்காக திருமலையில் உள்ள விற்பனைக் கூடங்களில் விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories