December 5, 2025, 3:40 PM
27.9 C
Chennai

Eng Vs Ind: ஓவலில் இந்தியா வெல்லுமா!?

eng vs ind test
eng vs ind test

இந்தியா-இங்கிலாந்து, நான்காவது டெஸ்ட், நான்காவது நாள், கென்னிங்டன் ஓவல், லண்டன்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

இங்கிலாந்து 290 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கட் இழப்பின்றி 77 (ஹமீட் 43, பர்ன்ஸ் 31) இந்தியாவை (191 மற்றும் 466) (ரோஹித் 127, புஜாரா 61, தாக்கூர் 60, பந்த் 50, வோக்ஸ் 3-83) வெல்ல இன்னும் 291 ரன்கள் தேவை

நான் எப்போதுமே ஒரு டெஸ்டில் வெற்றிபெற, இந்தியாவின் முன்னணி ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இரண்டு சதங்கள், நான்கு அரைசதங்கள் அடித்து, இரண்டு நாட்கள் விளையாட வேண்டும் என்று சொல்வது வழக்கம். இப்போது அவர்கள் அதைச் செய்துள்ளனர். ரோகித் 127, ராகுல் 46, புஜாரா 61, கோஹ்லி 44, பந்த் 50, என முதல் ஐந்து மட்டையாளர்கள் இதனைச் செய்துள்ளனர். கூடுதலாக ஷர்துல் தாக்கூர் 60 ரன்கள் எடுத்துள்ளார். இது இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 466 ரன்கள் எடுக்க உதவியது. இப்போது அவர்களின் பந்துவீச்சாளர்கள் ஐந்தாவது நாளில் 90 ஓவர்களில் இங்கிலாந்தை அவுட்டாக்கி நல்ல ஒரு அடித்தளம் கொண்டுள்ளனர். இன்று மைதானத்தில் அஷ்வின் போல் இன்னொரு சுழற்பந்து வீச்சாளர் இல்லாததற்கு கோஹ்லி வருத்தப்படுவார். ஆனால் தற்போதைய இந்திய அணி வெற்றி பெறும் திறன் கொண்டது.

நான்காவது காலை மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் என்ற முன்னிலையுடன் இந்தியா ஆட்டத்தைச் தொடங்கியது. மேலும் குறிப்பிடத்தக்க மூன்றாவது இன்னிங்ஸை நோக்கி முன்னேறியது. அவர்கள் கொத்தாக விக்கெட்டுகளை இழந்தனர் ஆனால் இங்கிலாந்தின் பந்துவீச்சாளர்கள் ஒரு தட்டையான ஓவல் ஆடுகளத்தில் வழக்கமான வாய்ப்புகளை உருவாக்கப் போராடினர் மற்றும் இந்தியாவின் மொத்த 466 ரன்கள், 2009க்குப் பிறகு ஒரு டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் அதிகபட்சமாக ஸ்கோராகும்.

மூன்றாவது மாலை இரண்டாவது புதிய பந்தை நன்கு விளையாடிய கோஹ்லியும் ஜடேஜாவும் மீண்டும் தொடர்ந்தனர் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஒல்லி ராபின்சனின் முதல் சில ஓவர்களை எளிதாகக் கையாண்டனர். ஆனால் கிறிஸ் வோக்ஸின் அன்றைய முதல் சில ஓவர்கள் இரண்டு விக்கட்டுகளைக் கொண்டு வந்தது. அவரது இரண்டாவது பந்தில் ஜடேஜா எல்.பி.டபில்யூ ஆனார். ஜடேஜா இந்த முடிவை மதிப்பாய்வு செய்தார், ஆனால் ஆன்-ஃபீல்ட் அம்பயரின் முடிவு உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு வந்த ரஹானே திணரலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இரண்டு பந்துகளுக்கு ஒரு முறை அவருக்கு எதிராக ‘LBW முறையீடுகள்’ செய்யப்பட்டன. வோக்ஸின் இரண்டாவது ஓவரில் அவருக்கு அத்தகைய அதிர்ஷ்டம் இல்லை. அவரது ரன் எதுவும் எடுக்கவில்லை என்பது அவரது டெஸ்ட் சராசரியை ஆறு வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக 40க்கும் குறைவாகக் குறைந்துவிட்டது, மேலும் அவர் மான்செஸ்டரில் விளையாடுவது சற்று கடினம். உண்மையில் ஷர்துல் தாக்கூர் இந்தத் தொடரில் ரஹானேவை விட அதிக ரன்கள் எடுத்துள்ளார்.

eng ind 2nd test
eng ind 2nd test

காலை நேர அமர்வின் இரண்டாவது மணிநேரத்தில் கோஹ்லி சரளமாக ஸ்கோர் செய்யப் போராடினார். அவரது அரை சதத்திற்கு ஆறு ரன்கள் குறைவாக இருக்கும்போது அவுட்டானார். அச்சமயத்தில் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸ் நான்கு விக்கெட்டுகளைக் கைவசம் வைத்து 211 ரன்கள் முன்னிலை வகித்தது. கடைசி பேட்ஸ்மேனாக பந்த் கிரீஸில் இருந்தார். பந்த் மற்றும் தாக்கூர் இருவரும் தங்கள் வழக்கமான எதிர் தாக்குதல் பாணியில் விளையாட ஆசைப்பட்டிருப்பார்கள், ஆனால் அதற்கு பதிலாக மதிய உணவு வரை நிதானமாக பேட் செய்தார்கள்.

ஆண்டர்சன் மற்றும் ராபின்சன் இருவரும் இன்னிங்ஸில் 30 ஓவருக்கு மேல் பந்து வீசும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர், மேலும் தாக்கூர் அவர்களை அலட்சியமாகக் கையாண்டார். ராபின்சனின் பாலில் ஒரு சிக்ஸர் அடித்தார். அவ்வப்போது வாய்ப்புகள் இருந்தன, மொயீன் ஒரு ரன்-அவுட் வாய்ப்பை குழப்பினார். மற்றும் பன்ட் ஆண்டர்சனை ரிவர்ஸ்-ஸ்வீப் செய்ய முயன்றபோது இறுக்கமான lbw கத்தலில் இருந்து தப்பினார், ஆனால் அவர்கள் 300 க்கு அப்பால் முன்னிலை பெற, இணைந்து ஆடி 100 ரன்கள் எடுத்தனர்.

அவர்கள் இருவரும் ஆறு பந்து இடைவெளியில் அவுட்டயினர். உமேஷ் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இங்கிலாந்தின் பந்துவீச்சாளர்களைத் தூக்கி எறிந்து, டீ இடைவேளைக்கு முன்னரும் பின்னரும் வேடிக்கை பார்த்தனர். இது இங்கிலாந்தை இரண்டு மணி நேரம் நல்ல சூரிய ஒளியில் பேட் செய்து சாதனை துரத்தலை தொடங்க வைத்தது.

ஆனால் ஹமீதுக்கு எதிராக முகமது சிராஜின் ஒரு நம்பிக்கைக்குரிய lbw வேண்டுகோளைத் தவிர பந்து வீச்சாளர்கள் சோபிக்கவில்லை. இது களத்திலும் டிஆர்எஸ் மூலமும் நிராகரிக்கப்பட்டது, அவர்கள் மாலை அமர்வில் வாய்ப்புகளை உருவாக்க போராடினர்.

ரவி சாஸ்திரி உட்பட துணை ஊழியர்கள் நான்கு பேர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர். ரோஹித் சர்மா மற்றும் சேதேஷ்வர் புஜாரா ஆகிய இரண்டு மூத்த வீரர்கள் காயம் காரணமாக இன்று விளையாடமாட்டார்கள் எனத் தகவல்கள் சொல்கின்றன. கேப்டன் கோலிக்கு இன்றைய இறுதி நாள் ஆட்டம் கொஞ்சம் டென்ஷனான ஆட்டமாகத்தான் இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories