December 5, 2025, 4:34 PM
27.9 C
Chennai

நாமம் தரும் க்ஷேமம்!

panduranga
panduranga

ஸமர்த்த ராமதாசர் சிவாஜி மகாராஜாவின் குரு சதுக்காராம் மகராஜ் அவர்களும் சமர்த்த ராமதாசரும் சம காலத்தவர்கள். ராமதாசர் என்ற பெயரிலிருந்தே அவர் ராம பக்தர், அதனால் ஆஞ்சநேய பக்தர் என்று விளங்கும்.

சிறு பையனாக இருந்தபோதே ஸ்ரீ ராமர் அவருக்கு காட்சி தந்திருக்கிறார் என்றால் பாருங்களேன். “ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்” என்ற தாரக மந்திரத்தை 13 லக்ஷம் உச்சரித்து நாமஜபம் பண்ணி ஸ்ரீ ராமனே அவருக்கு நாசிக் என்ற ஊரில், கோதாவரி நதிக்கரையில் காட்சி தந்திருக்கிரார்.

ஒரு பெண்ணுக்கு “தீர்க்க சுமங்கலி பவ” என்று ஆசிர்வதித்த பின் அவள் கணவன் இறந்துவிடஅவள் அவரிடம் ஓடி வந்து முறையிட, கமண்டலத்தில் ஜலம் எடுத்து ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்” மந்திரம் சொல்லி அவன் உடலின் மேல் தெளிக்க அவன் உயிர் பெற்றான் என்று ஒரு வரலாறு உண்டு .

நமது பாண்டுரங்கன் கதைக்கு வருவோம். ராமதாஸ் பண்டரிபுரம் வந்ததில்லை பாண்டுரங்கனை பார்த்ததில்லை! அந்த ஊர் எங்கிருக்கு என்றுகூட தெரியாது.
அன்று சற்று லேசான மழை.

தனது ஆஸ்ரமத்தில் ராமதாஸ் ராம நாம ஸ்மரணையில் இருக்கும்போது நிறைய கூட்டமாக யாரோ வந்தனர். யார் என்று வெளியே சென்று பார்த்தபோது ஒரு வயதான பிராமணர் முதலில் நிற்க அவர் பின்னாடி நூற்றுக்கணக்கான பேர்.

சிறிது மழை விடும் வரை தங்க இடம் கேட்க ஆஸ்ரமத்தை திறந்து உள்ளே விட்டார் அவர்களை. பிராமணர் சிறந்த ஞானி வேத சாஸ்திர விற்பன்னர் ஆகவே ராமதாசருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

“நாங்கள் உங்களைப்பற்றி கேள்விப்பட்டு உங்களை பார்த்தால் சாக்ஷாத் ராமனை தர்சித்தது போல் ஆகுமே என்று உங்களை தேடி வந்தோம்”
“நீங்கள் யார்? எங்கு செல்கிறீர்கள்?”
“உத்தர காசி.

இவைகள் அனைவரும் பல பல இடங்களிலிருந்து எங்களோடு சேர்ந்து கொண்டவர்கள் அனைவருமாக இப்போது பண்டரிபுரம் செல்கிறோம். பாண்டுரங்கனை தரிசித்து அருள் பெற” நீங்கள் எங்களுக்கு எப்படி பண்டரிபுரம் செல்லவேண்டும் என்று சொல்ல முடியுமா?”
“சுவாமி நான் சென்றதில்லை. வழி தெரியாதே.”
“நான் அழைத்து சென்றால் நீங்களும் வாருங்களேன் கிருஷ்ணாவதாரம் செய்த ராமன் தானே அந்த பாண்டுரங்க விட்டலனும்” ஏதாவது மறுப்பு உண்டோ?”
“ஒன்று மில்லை.

ராமனை பாண்டுரங்கன் உருவில் காண எனக்கு விருப்பம் தான். உங்களோடு நானும் புறப்படுகிறேன்” .

பலநாட்கள் பிரயாணம் மிக அற்புதமாக ரசமாக அமைந்தது ராமதாசருக்கு. பிராமணர் அனைத்தும் கற்ற ஞானி அல்லவோ.

கர்ணாம்ருதமாக இருந்தது அவர் பேச்சு. பண்டரிபுரம் அடைந்து அனைவரும் கோவில் உள்ளே சென்றனர். பிராமணர் ராமதாசரை அழைத்து சந்நிதியில் நிற்க வைத்து மாயமாக மறைந்தார்.

என்ன ஆச்சர்யம் இது என்று ராமதாசர் வியக்க மற்றொரு அதிசயமும் காத்திருந்தது அவருக்கு. அவரைதானே நேரில் பிராமணராக சென்று அழைத்து வந்த விட்டலன் உள்ளே செங்கலில் நின்று ஸ்ரீ ராமனாக சீதா பிராட்டி அனுமன் சமேதனாக அவருக்கு சிரித்து கொண்டே காட்சியளித்தான்.

பக்தர்களுக்காக அந்த பரந்தாமன் எந்த வேஷமும் போடுவான் எந்த நாடகமும் ஆடுவான் பக்த ஜன பிரியன் அல்லவா அந்த சர்வ இரட்சகனான விட்டலன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories