நாமம் தரும் க்ஷேமம்!

panduranga
panduranga

ஸமர்த்த ராமதாசர் சிவாஜி மகாராஜாவின் குரு சதுக்காராம் மகராஜ் அவர்களும் சமர்த்த ராமதாசரும் சம காலத்தவர்கள். ராமதாசர் என்ற பெயரிலிருந்தே அவர் ராம பக்தர், அதனால் ஆஞ்சநேய பக்தர் என்று விளங்கும்.

சிறு பையனாக இருந்தபோதே ஸ்ரீ ராமர் அவருக்கு காட்சி தந்திருக்கிறார் என்றால் பாருங்களேன். “ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்” என்ற தாரக மந்திரத்தை 13 லக்ஷம் உச்சரித்து நாமஜபம் பண்ணி ஸ்ரீ ராமனே அவருக்கு நாசிக் என்ற ஊரில், கோதாவரி நதிக்கரையில் காட்சி தந்திருக்கிரார்.

ஒரு பெண்ணுக்கு “தீர்க்க சுமங்கலி பவ” என்று ஆசிர்வதித்த பின் அவள் கணவன் இறந்துவிடஅவள் அவரிடம் ஓடி வந்து முறையிட, கமண்டலத்தில் ஜலம் எடுத்து ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்” மந்திரம் சொல்லி அவன் உடலின் மேல் தெளிக்க அவன் உயிர் பெற்றான் என்று ஒரு வரலாறு உண்டு .

நமது பாண்டுரங்கன் கதைக்கு வருவோம். ராமதாஸ் பண்டரிபுரம் வந்ததில்லை பாண்டுரங்கனை பார்த்ததில்லை! அந்த ஊர் எங்கிருக்கு என்றுகூட தெரியாது.
அன்று சற்று லேசான மழை.

தனது ஆஸ்ரமத்தில் ராமதாஸ் ராம நாம ஸ்மரணையில் இருக்கும்போது நிறைய கூட்டமாக யாரோ வந்தனர். யார் என்று வெளியே சென்று பார்த்தபோது ஒரு வயதான பிராமணர் முதலில் நிற்க அவர் பின்னாடி நூற்றுக்கணக்கான பேர்.

சிறிது மழை விடும் வரை தங்க இடம் கேட்க ஆஸ்ரமத்தை திறந்து உள்ளே விட்டார் அவர்களை. பிராமணர் சிறந்த ஞானி வேத சாஸ்திர விற்பன்னர் ஆகவே ராமதாசருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

“நாங்கள் உங்களைப்பற்றி கேள்விப்பட்டு உங்களை பார்த்தால் சாக்ஷாத் ராமனை தர்சித்தது போல் ஆகுமே என்று உங்களை தேடி வந்தோம்”
“நீங்கள் யார்? எங்கு செல்கிறீர்கள்?”
“உத்தர காசி.

இவைகள் அனைவரும் பல பல இடங்களிலிருந்து எங்களோடு சேர்ந்து கொண்டவர்கள் அனைவருமாக இப்போது பண்டரிபுரம் செல்கிறோம். பாண்டுரங்கனை தரிசித்து அருள் பெற” நீங்கள் எங்களுக்கு எப்படி பண்டரிபுரம் செல்லவேண்டும் என்று சொல்ல முடியுமா?”
“சுவாமி நான் சென்றதில்லை. வழி தெரியாதே.”
“நான் அழைத்து சென்றால் நீங்களும் வாருங்களேன் கிருஷ்ணாவதாரம் செய்த ராமன் தானே அந்த பாண்டுரங்க விட்டலனும்” ஏதாவது மறுப்பு உண்டோ?”
“ஒன்று மில்லை.

ராமனை பாண்டுரங்கன் உருவில் காண எனக்கு விருப்பம் தான். உங்களோடு நானும் புறப்படுகிறேன்” .

பலநாட்கள் பிரயாணம் மிக அற்புதமாக ரசமாக அமைந்தது ராமதாசருக்கு. பிராமணர் அனைத்தும் கற்ற ஞானி அல்லவோ.

கர்ணாம்ருதமாக இருந்தது அவர் பேச்சு. பண்டரிபுரம் அடைந்து அனைவரும் கோவில் உள்ளே சென்றனர். பிராமணர் ராமதாசரை அழைத்து சந்நிதியில் நிற்க வைத்து மாயமாக மறைந்தார்.

என்ன ஆச்சர்யம் இது என்று ராமதாசர் வியக்க மற்றொரு அதிசயமும் காத்திருந்தது அவருக்கு. அவரைதானே நேரில் பிராமணராக சென்று அழைத்து வந்த விட்டலன் உள்ளே செங்கலில் நின்று ஸ்ரீ ராமனாக சீதா பிராட்டி அனுமன் சமேதனாக அவருக்கு சிரித்து கொண்டே காட்சியளித்தான்.

பக்தர்களுக்காக அந்த பரந்தாமன் எந்த வேஷமும் போடுவான் எந்த நாடகமும் ஆடுவான் பக்த ஜன பிரியன் அல்லவா அந்த சர்வ இரட்சகனான விட்டலன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Topics

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories