வீடியோ கால்.. ஆபத்து! எச்சரிக்கும் காவல்துறை!

Pornography
Pornography

வீடியோ அழைப்பின் மூலம் இளம்பெண்களை ஆபாசமாக காட்டி பணம் பறிக்கும் கும்பல் உள்ளதாகவும் விழிப்புணர்வுடன் இருக்கும்படி திருச்சி மாநகர காவல் துறை சார்பில் சமூக வலைதளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி மாநகர காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பேஸ்புக் மூலம் தொலைபேசி எண்களை எடுத்து வாட்ஸ் ஆப் கால் மூலம் இளம்பெண்களைப் போல இணையவழி குற்றவாளிகள் தொடர்பு ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

பின்னர் வீடியோ கால் மூலம் ஆபாசமாக சித்தரித்து ரசிக்க வைக்கிறார்கள். பின்பு உணர்ச்சிகளைத் தூண்ட செய்து சம்பந்தப்பட்ட நபரையும் ஆபாசமாக பதிவு செய்து கொள்கிறார்கள்.

பின்னர் சம்பந்தப்பட்ட நபரை தொலைபேசியில் அழைத்து, நீங்கள் ஒரு இளம்பெண்ணுடன் உள்ள பதிவு எங்களிடம் உள்ளது. இதனை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவோம். அப்படி செய்யாமல் இருப்பதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்புங்கள் என்று கூறி மிரட்டுகின்றனர்.

சம்பந்தப்பட்ட நபர் நம்பவில்லை என்றால், இளம்பெண்ணுடன் இருப்பது போல் போலியான ஒரு வீடியோ பதிவை அனுப்பி பணம் கேட்டு மிரட்டுவார்கள். அல்லது நீங்கள் அழைப்பை ஏற்ற சில வினாடிக்குள் நீங்கள் சுதாரிப்பதற்குள் உங்களது முகத்துடன் கூடிய ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுவார்கள். அந்த நபர் தன்மானம் கருதி கேட்ட பணத்தை அனுப்பிவிட கூடும்.

இதேபோல் அடிக்கடி மிரட்டி பணம் பறிக்க முயல்வார்கள். சில சமயங்களில் அவர்களின் அழுத்தம் காரணமாக விபரீத முடிவிற்கும் தள்ளப்படுவதும் உண்டு. இதேபோல் பல இளைஞர்கள் அவர்களின் பார்வையில் மாட்டிக்கொண்டு தவித்து பணத்தையும் நிம்மதியும் இழக்கிறார்கள்.

நவீன தொழில்நுட்பங்கள் அதிகம் வந்துவிட்டதால் மோசடி ஆசாமிகள் புதுப்புது உத்திகளை கையாண்டு வருகின்றனர். எனவே சமூக வலைதளங்களில் இருப்பவர்கள் ப்ரொபைலில் தங்களது சுய விவரங்களை குறிக்கும்போது தயவுசெய்து செல்போன் எண் புகைப்படங்கள் போன்ற தனிப்பட்ட விவரங்களைப் பதிவிட வேண்டாம். தெரியாத எண்ணில் வரும் அழைப்பை தொடர வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

மேலும் விழிப்புணர்வு நோட்டீஸ் பதிவிடப்பட்டுள்ளது. அதில் திருச்சி மாநகர காவல், எச்சரிக்கை! வீடியோ அழைப்பின் மூலம் ஆபாச வீடியோக்கள் காட்டி பணம் பறிக்கும் கும்பல், சைபர் குற்றங்களை பற்றி இணையவழியில் புகார் தெரிவிக்க https://www.cybercrime.gov.in/ என்ற வலைதளத்தை தொடரவும். சைபர் க்ரைம் உதவி எண் 155260 என பதிவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Topics

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories