காகமாக வந்த இறந்த தந்தை! விருந்தளித்து உபசரிக்கும் குடும்பம்!

crow 2
crow 2

இறந்துபோன தந்தை காகம் வடிவில் தங்களின் வீட்டுக்கு வந்திருப்பதாக நினைத்து ஒரு குடும்பத்தார் காகத்திற்கு விதவிதமான உணவை வைத்து பார்த்துக்கொள்ளும் சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் சோமரம்பேட்டை அருகே உள்ள அல்லித்துறையைச் சேர்ந்தவர் பாண்டியன். இவருக்கு வயது 60. விவசாயியான இவர், ஜோசியமும் ஜாதகமும் பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், பாண்டியன் கடந்த மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் உடலை அடக்கம் செய்து விட்டு, வீட்டில் அவரின் புகைப்படத்தை வைத்து குடும்பத்தினர் வழிபட்டு வந்தனர்.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு, காகம் ஒன்று பாண்டியன் வீட்டையே சுற்றி சுற்றி வந்துள்ளது. இதனைக்கண்ட அவரது குடும்பத்தார் காகத்தை விரட்டியடித்துள்ளனர்.

ஆனால், காகம் எந்தவித அச்சமும் இல்லாமல் வீட்டின் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த பாண்டியனின் புகைப்படம் முன்பாக வந்து அமர்ந்து கொண்டது.

crow
crow

இதைக்கண்ட குடும்பத்தினர் இறந்துபோன தங்கள் தந்தையே காகம் வடிவில் வீட்டுக்கு வந்ததாக நம்ப தொடங்கினார்கள். இதனைத் தொடர்ந்து, காகத்துக்கு தேவையான உணவு, நீரை வழங்கி வணங்கி வருகின்றனர்.

இறந்துபோன தனது தந்தை காகம் வடிவில் வந்துள்ளார் என்றும், தந்தை அமரும் இடம் மற்றும் படுக்கை அறைக்கு அந்த காகம் செல்கிறது என்றும், தங்களுக்கு சொந்தமான வயலில் தந்தை வடிவில் உள்ள காகம் வந்து அமர்ந்து கொள்கிறது. இதுவெல்லாம் எப்படி ஒரு காகத்திற்கு தெரியும். எனவேதான், தங்களின் தந்தை காகம் வடிவில் வந்துள்ளதாக பாண்டியனின் மகன் வினோத் உருக்கமாக கூறினார்.

வினோத் மேலும் கூறுகையில், “எங்கள் தந்தை வீட்டில் எங்கெல்லாம் செல்கிறாரோ. அங்கு எல்லாம் காகம் செல்லும். அப்போதுதான் நினைத்தோம் காகம் ரூபத்தில் தந்தை வந்துள்ளார் என்று.

இப்பவும் அவர் எங்களை விட்டு போகவில்லை இங்குதான் இருக்கிறார்” என்று கூறினார். இந்த நிகழ்வை அந்தப்பகுதி மக்கள் ஆச்சயர்த்துடன் பார்க்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

Topics

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

Entertainment News

Popular Categories