டீக்கடை வருமானத்தில்உலகம் சுற்றும் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் தம்பதி!

vijayanvijayan mohana
vijayanvijayan mohana

தங்களுடைய டீக்கடை வருமானத்தின் மூலம் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளில் 25 நாடுகளைச்சுற்றி வியப்பை ஏற்படுத்தியுள்ளார்கள் இந்த கேரளாவைச் சேர்ந்த தம்பதி.

வாழ்க்கையில் வெளிநாடுகளுக்குச் சென்று அங்குள்ள இடங்களையெல்லாம் சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால் ஒவ்வொரு குடும்பமும் அவர்களின் பொருளாதாரச் சூழல் கருதி தம் ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் இடத்திற்குக் கூட செல்ல முடியாமல் தவிப்பார்கள்.

ஆனால் நம்முடைய சந்தோஷத்திற்கு எல்லாம் வறுமை ஒரு தடையில்லை எனவும், நம் கனவு தான் நம்மை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் என்பதற்கேற்ப தன்னுடைய டீக்கடை வருமானத்தின் மூலம் உலகையே சுற்றிக் கொண்டிருக்கின்றனர் இந்த சூப்பர் ஜோடி.

vijayan
vijayan

கேரள மாநிலம் கொச்சினில் காந்திநகர் பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகின்றனர் 71 வயதான கே.ஆர் விஜயன் மற்றும் 69 வயதான மோகனா. இவர்கள் இருவருக்கும் உலகைச்சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை சிறுவயதில் இருந்தே இருந்ததாககவும், ஆனால் இதற்குப் பணம் ஒரு தடையாக இருந்து வந்துள்ளது.

இந்தச் சூழலில் தான், கடந்த 1963-ம் ஆண்டு டீக்கடை ஒன்றை ஆரம்பித்தார் விஜயன், இதன் மூலம் வரும் வருமானத்தைக்கொண்டு உலகத்தைச் சுற்றி வரலாம் என முடிவு செய்தனர்.

ALSO READ:  ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இதற்காக இவர்களது கடையில் யாரையும் வேலைக்கு வைக்கவில்லையாம். இந்த கடையில் இவர்களே முதலாளிகள், இவர்களே தொழிலாளிகள்.

இவ்வாறு தங்களுடைய டீக்கடை வருமானத்தில் குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, அதில் ஒரு பகுதியை தங்களுடைய சுற்றுப்பயணத்திற்காகச் சேமிக்க ஆரம்பித்தனர்.

tea shop
tea shop

அப்படி கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் சேர்த்து வைத்தத் தொகைத்தான் தற்போது அவர்களின் கனவை நிறைவேற்றிவருகிறது.

கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வேலைக்குச் சிறிது விடுமுறைவிட்டு உலக நாடுகளுக்குப்பறக்க ஆரம்பித்தனர் இந்த விஜயன் – மோகனா தம்பதிகள்.

இதுவரை சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து,நியூயார்க் , பிரேசில், அர்ஜென்டினா, பெரு உள்ளிட்ட நாடுகளுக்குப் பறந்துள்ள இத்தம்பதிகள், இப்படி உலக நாடுகளைச் சுற்றியும் போது பல்வேறு கலாச்சாரங்களைத் தெரிந்துக்கொள்ள முடிகிறது எனவும் இதன் மூலம் வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை வருவதாகக் கூறுகிறார் விஜயன்.

கடந்த 14 ஆண்டுகளில் எங்களது உலக நாடுகளுக்கிடையேயான சுற்றுப்பயணம் இன்னும் முடியவில்லை. கொரோனா ஊரடங்கினால் இரண்டு ஆண்டுகள் எங்கும் செல்லாமல் இருந்த நிலையில் தற்போது வருகின்ற அக்டோபர் 21-ம் தேதி ரஷ்யா செல்லத் திட்டமிட்டதாகக் கூறுகின்றனர்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

இந்த முறை தங்களுடைய பேரக்குழந்தைகளுடன் பயணிக்க முடிவு எடுத்துள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார் கே. ஆர். விஜயன்.

மேலும் நாங்கள் இதுவரை 25 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளோம் எனவும் ரஷ்யா 26-வது நாடு என்கிறார் மோகனா.,” நாங்கள் சென்றதிலே எனக்கு மிகவும் பிடித்தது சுவிட்சர்லாந்து” தான் எனவும் கூறுகிறார்.

இந்த முறை ரஷ்யா செல்லும் போது அதிபர் விளாடிமிர் புதினை பார்க்க நினைப்பதாகவும் கூறுகின்றனர். உழைப்பினால் தனது கனவையும், சந்தோஷத்தையும் நிறைவேற்றி வரும் இவர்களைப்பார்க்கும் போது தன்னம்பிக்கை வருவதுடன் சிறிது பொறாமையுமாகத் தான் உள்ளது.

நிச்சயம் இவர்களின் வாழக்கையை அனைவரும் முன் உதாரணமாகவே எடுத்துக்கொள்ளலாம். இந்த வயதிலும் இந்த தம்பதியின் தன்னம்பிக்கையும், காதலும் அனைவரையும் வியக்கவைக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories