காம்பௌண்ட் வால் கிட்டயே பாம்பை லாக் செய்த வளர்ப்பு நாய்!

Published:

snake 1 8
snake 1 8

வீட்டிற்குள் நுழைய முயன்ற நல்ல பாம்பை வளர்ப்பு நாய் ஒன்று குறைத்து விரட்டிய வீடியோ வெளியாகியுள்ளது.

வீட்டின் செல்லப்பிராணியாக வளர்க்கப்படுகிறது நாய். இவை செல்லப்பிராணியாக மட்டுமில்லாமல் நன்றியுள்ள ஜீவன் ஆகவும் காணப்படுகிறது. பலநேரங்களில் இவை மனிதர்களுக்கு ஏற்ற தோழனாகவும் உள்ளது.

ஆபத்து நேரத்தில் தன் உயிரையும் பணயம் வைக்கும் குணத்தையும் செல்லப்பிராணி நாய் பெற்றிருக்கும்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள சின்னக்கங்கனாகுப்பம் பகுதியை சேர்ந்தவர் பிரியா. இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்த நிலையில், இன்று காலை அவர் வெளியே சென்றுவிட்டார்.

வீட்டிற்குள் இருந்த நாய் வெகு நேரமாக குறைத்து கொண்டிருந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது காம்பவுண்டு பகுதியில் நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து இருந்தது தெரியவந்தது.

snake2
snake2

பாம்பை கண்ட நாய் குரைத்துக் கொண்டே இருந்ததை அடுத்து, பொதுமக்கள் பாம்பு பிடிப்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். நாய் பாம்பை விட்டு விலகி வராமல் அங்கு நின்று வெகு நேரமாக குரைத்து கொண்டிருந்தது.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த பாம்போ நாயைத் தாக்கவும் முயற்சித்தது. தாக்குதலிலிருந்து சாமர்த்தியமாக தப்பித்த நாய், தொடர்ந்து அதனை எதிர்த்துக் கொண்டே இருந்தது.

அரை மணி நேரமாக நடைபெற்ற இந்த போராட்டத்தில், பாம்பை அங்கிருந்து நகர விடாமல் நாய் பார்த்துக்கொண்டது. இதையடுத்து பாம்பை பிடிக்கும் செல்வா என்ற நபர் சம்பவ இடத்திற்கு விரைந்து பாம்பை பிடித்து காட்டுப்பகுதியில் விட்டார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Related articles

Recent articles

spot_img