கஷ்டத்தில் கற்றது தான்.. கட்டிலிலே கழிப்பறை!

Patient bed2
Patient bed2

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே எறும்புக்காடையைச் சேர்ந்தவர் சரவணமுத்து. 44 வயதான அவர் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.

இவர் சிறுவயதிலிருந்து கார் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். கடந்த 18 ஆண்டுகளாக வெல்டிங் பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார்.

வெடிங் பட்டறையில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது அவர் சில வித்தியாசமான தானியங்கி பொருட்களை உருவாக்கி வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

ஒரு நாள் சரவணமுத்துவின் மனைவிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் அவருக்கு கர்பப்பை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சரவணமுத்துவின் மனைவிக்கு கழிப்பறை செல்ல மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.

Patient bed
Patient bed

இதனைக்கண்டு வேதனையுற்ற சரவணமுத்து, இதுபோன்ற படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்கு உதவும் வகையில் ஏதாவது ஒரு கண்டுபிடிப்பு செய்யவேண்டுமென நினைத்துள்ளார்.

தனது மனைவி படும் துயரம் காணாது அவர் உருவாக்கியதுதான் இந்த கழிப்பறை படுக்கை. கடந்த 2016 ஆம் ஆண்டு இதனை தயார் செய்ய துவங்கிய அவர் இதுவரை 16 க்கு மேற்பட்ட படுக்கைகள் செய்துள்ளார்.

படுக்கையில் இருக்கும் நோயாளிகள் பிறருடைய துணையின்றி அந்தப் படுக்கையிலேயே மல, ஜலம் கழிக்கவும், அதனை தானே சுத்தம் செய்யவும் இயந்திரங்களை பொருத்தி சாதனை படைத்துள்ளார். இந்த கட்டிலை தயார் செய்ய குறைந்தது
இரண்டு மாதங்கள் வரை ஆகிறது.

இவர் இதுபோன்று வித்தியாசமான முறையில் தானியங்கி படுக்கை மற்றும் கழிப்பிட வசதியுடன் கூடிய கட்டில்களை தயார் செய்து வருவதற்காக 2019 ஆண்டு ஜனாதிபதியிடம் இருந்து சிறந்த படைப்பிற்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

மேலும் இந்திய விண்வெளி மையம், அண்ணா பல்கலைகழகம், ஜிப்மர் மருத்துவமனை உட்பட பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து இதுவரை 17 விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் பெற்றுள்ளார்.

Patient bed award
Patient bed award

இதுகுறித்து சரவணமுத்து கூறும்போது, “நான் முதன்முதலில் குறைந்த எரிபொருள் கொண்டு இயங்கும் இன்ஜினை தயாரிக்க முயற்சி செய்து வந்தேன். ஆனால், அதில் தொடர்ந்து தோல்வி ஏற்படவே நீண்ட நாட்களாக விரக்தியில் இருந்தேன். அப்போதுதான் எனது மனைவிக்கு அறுவை சிகிச்சை நடந்தது.

பின்பு, அவள் பட்ட வேதனையை வேறு யாரும் படக்கூடாது என எண்ணி, இந்த கண்டுபிடிப்பை உருவாக்கினேன். ஆரம்ப காலகட்டத்தில் நான் செய்த பல அறிவியல் கண்டுபிடிப்புகளை புராஜெக்ட் என்ற பெயரில் பலரும் எடுத்துச் சென்று அதனை காப்புரிமை பெற்று பெரிய அளவில் முன்னுக்கு வந்துள்ளனர்.

தற்போது இந்த கண்டுபிடிப்புக்கான காப்புரிமை என்னிடம் உள்ளது. இதனை சந்தைப்படுத்த அரசு உதவி செய்ய வேண்டும். சுமார் 60,000 முதல் 3 லட்சம் ரூபாய் வரையிலான பலதரப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய படுக்கை தயார் செய்ய முடியும்.

தற்போது வியாபார நோக்கில் செய்து வரும் இந்த கட்டிலை சேவை நோக்கத்துடன் செய்ய விருப்பமாக உள்ளது. அதற்கு அரசு உரிய ஊக்கமும் முயற்சியும் இடத்தில் தொழிற்சாலை போன்று அமைத்து தந்தால், ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி நோயாளிகளையும் பயனடைய செய்ய முடியும்.” எனக் கூறினார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories