இது தான் சூரியன்.. வானியல் புகைப்படக் கலைஞர் வெளியிட்ட படம்!

sun - 2026

அக்னி குழம்புகளால் சூழப்பட்ட மிகப்பெரிய விண்மீண் தான் சூரியன்.
அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆதாரமாக திகழும் பகவலன். சூரியனின் மேற்பரப்பு எப்போதுமே கொழுந்துவிட்டு எரிந்துகொண்டே இருக்கும். எவ்வளவோ ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருந்தும் கூட அந்த சூரியனை நம் கண்களால் சில நொடிகள் கூட பார்க்க இயலாது. நிலா, செவ்வாய்க்கு செல்லும் விஞ்ஞானிகளால் சூரியனை நெருங்க கூட முடியவில்லை.

ஆனால் அதிநவீன தொலைநோக்கி (Telescope) மூலம் அதன் மேற்பரப்பை பார்க்க முடியும். அவ்வாறு பார்த்து அதனை படம் பிடித்தும் வெளியிட்டிருக்கிறார் வானியல் புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரூ மெக்கார்த்தி.

அந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். வித்தியாசமான முறையில் தொலைநோக்கியால் படம்பிடித்துள்ளார்.

அதாவது சூரியனின் பல்வேறு பகுதிகளை தனித்தனியாக 1 லட்சத்து 50 ஆயிரம் புகைப்படங்கள் எடுத்துள்ளார். பின்னர் அவையனைத்தையும் ஒன்றிணைத்து சூரியனின் முழு புகைப்படத்தையும் வடிவமைத்திருக்கிறார்.

இறுதியில் அந்த புகைப்படம் 300 MP சைஸில் வந்துள்ளது. இது 5MP சைஸ் கொண்ட சாதாரண போன் கேமராவை விட 60 மடங்கு அதிகமானது.

அமெரிக்காவிலுள்ள அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்த மெக்கார்த்தி, இந்தப் புகைப்படம் உலகத்திற்கும் தனக்கும் மிகவும் ஸ்பெஷலான புகைப்படம் என்றும், சூரியனை ஒவ்வொரு முறை படம்பிடிக்கும் போதும் உற்சாகமாக உணர்வதாகவும் கூறுகிறார்.

இயல்பாகவே சூரியனின் மேற்பரப்பை படம்பிடிக்க இரண்டு தொலைநோக்கி ஃபில்டர்கள் தேவைப்படுகின்றன. ஒன்று படம்பிடிப்பவரின் கண்களை சூரியனிடமிருந்து காப்பாற்றும்.
மற்றொன்று தொலைநோக்கி எரிவதிலிருந்து காப்பாற்றும்.

ஏனென்றால் கேமராவை நோக்கி சூரியன் அதிகப்படியான ஒளியை வெளிப்படுத்தும். ஆனால் மெக்கார்த்தியோ அதிக உருப்பெருக்கத்தை உருவாக்குவதற்காக மாற்றியமைக்கப்பட்ட தொலைநோக்கியை (Modified Telescope) பயன்படுத்தியதாகக் கூறுகிறார்.

இவருக்கு முன்பாகவே பலர் சூரியனின் மேற்பரப்பு இப்படி தான் இருக்கும் என புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். ஆனால் அவையெல்லாம் சாப்ட்வேரால் வடிவமைக்கப்பட்டவை எனக்கூறி போலியானது என முத்திரை குத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/CW6VudMvbzA/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories