சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.
சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையை கிளப்பி வருகின்றன. வனவிலங்குகள் தொடர்பான வீடியோக்கள் எப்போதும் சமூக ஊடகங்களை தெறிக்க வைக்கும். சில நேரங்களில் இரண்டு விலங்குகள் காட்டின் நடுவில் ஒரு அபாயகரமான சண்டையில் ஈடுபட்டிருப்பதைக் காண்கிறோம்.
இவை சில சமயம் பாசத்தையும் சில சமயம் பகையையும் வெளிக்காட்டுகின்றன. பொதுவாக நாம், சிங்கம், சிறுத்தை, புலி போன்ற விலங்குகளை எப்போதும் ஆக்ரோஷமான பாணியிலேயே பார்த்துள்ளோம்.
தற்போது சிறுத்தை ஒன்று மலைப்பாம்பை தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. சிறுத்தையின் இந்த வீடியோவை பார்த்தவர்கள் ஆச்சரியமடைந்தனர். பொதுவாக இந்த வீடியோவில் பார்ப்பது போன்ற ஒரு காட்சியை காண முடியாது.
சமூகவலைத்தளங்களில் தலைப்புச் செய்தியாகி வரும் இந்த வீடியோவில், சிறுத்தை ஒன்று தாகத்துடன் தண்ணீர் குடிப்பதற்காக ஆற்றின் கரையை வந்தடைவதைக் காண முடிகின்றது.
அது தண்ணீரைக் குடிக்கும்போது, ஆற்றில் மிதக்கும் மலைப்பாம்பு அதை தாக்குகிறது. சிறுத்தை மலைப்பாம்பு மீது கோபம் கொண்டு வேட்டையாடும் மனநிலையுடன் மலைப்பாம்பை தாக்குகிறது.
சிறுத்தை மலைப்பாம்பை வாயில் கவ்விக்கொண்டு அங்கிருந்து நடந்து சென்றது. சிறுத்தையின் இந்த பயங்கரமான பாணியை மற்ற விலங்குகளும் பார்த்துக்கொண்டே இருக்கின்றன.
சிறுத்தை மற்றும் மலைப்பாம்பின் இந்த வீடியோ Wild_animal_shorts_ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. வனவிலங்குகளின் இந்த வீடியோவை பார்த்த சமூகவலைத்தளவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகின்றனர்.
கமெண்ட் பாக்ஸில் ஒருவர், ‘இது அனகோண்டா, மலைப்பாம்பு அல்ல’ என்று எழுதியுள்ளார். மற்றொருவர், ‘ நினைத்தாலே குலை நடுங்கச்செய்யும் இந்த சிறுத்தை ஒரு அபாயகரமான விலங்காகும்’ என்று எழுதியுள்ளார்.
இந்த வீடியோ ஆயிரக்கணக்கான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது.