கேரளாவுக்கு கனிமங்கள் கடத்தல்.. பொதுமக்கள் புகார்..

திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலை புளியரை சோதனை சாவடி வழியாக நள்ளிரவு நேரங்களில் ராட்சத லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருவதால் சாலைகள் சேதமாகிவிட்டதாக பொதுமக்கள் புகாரால் போலீசார் இன்று தீவிர சோதனை நடத்தினர்.

மதுரை திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலை வழியாக கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

விருதுநகர் நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள குவாரிகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களில் மணல் ஜல்லி உட்பட கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. இதனை கண்டித்து பெரும்பாலான கிராம மக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனாலும் புளியரை சோதனை சாவடி வழியாக நள்ளிரவு நேரங்களில் ராட்சத லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருவதாவும், இதனால் சாலைகள் சேதமாகிவிட்டதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜிக்கு புகார்கள் சென்றதுஇதையடுத்து அவரது உத்தரவின்பேரில் இன்று காலை புளியரை போலீசார் சோதனைச்சாவடியில் திடீர் வாகனசோதனை மேற்கொண்டனர். அப்போது ஏராளமான லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக எடையில் கனிமவளங்கள் கடத்தப்படுவது தெரியவந்தது.

இதனால் அந்த வாகனங்களுக்கு டன்னுக்கு ரூ.1000 வீதம் ஒவ்வொரு லாரிக்கும் சுமார் ரூ.20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்ற ராட்சத லாரிகளை அங்கிருந்த எடை நிலையத்திற்கு கொண்டு சென்று போலீசார் முன்னிலையில் எடை போடப்பட்டது.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

பெரும்பாலான லாரிகளில் 13 டன் முதல் 20 டன் வரை கூடுதல் கனிம வளங்கள் இருப்பது தெரியவந்தது. அவைகளுக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒருசில லாரி டிரைவர்கள் தங்களது லாரிகளை அப்படியே சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர்.இந்த வழித்தடத்தில் தமிழக எல்லையில் தினமும் தீவிர சோதனை நடத்த பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

Entertainment News

Popular Categories