கேரளாவுக்கு கனிமங்கள் கடத்தல்.. பொதுமக்கள் புகார்..

திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலை புளியரை சோதனை சாவடி வழியாக நள்ளிரவு நேரங்களில் ராட்சத லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருவதால் சாலைகள் சேதமாகிவிட்டதாக பொதுமக்கள் புகாரால் போலீசார் இன்று தீவிர சோதனை நடத்தினர்.

மதுரை திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலை வழியாக கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

விருதுநகர் நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள குவாரிகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களில் மணல் ஜல்லி உட்பட கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. இதனை கண்டித்து பெரும்பாலான கிராம மக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனாலும் புளியரை சோதனை சாவடி வழியாக நள்ளிரவு நேரங்களில் ராட்சத லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருவதாவும், இதனால் சாலைகள் சேதமாகிவிட்டதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜிக்கு புகார்கள் சென்றதுஇதையடுத்து அவரது உத்தரவின்பேரில் இன்று காலை புளியரை போலீசார் சோதனைச்சாவடியில் திடீர் வாகனசோதனை மேற்கொண்டனர். அப்போது ஏராளமான லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக எடையில் கனிமவளங்கள் கடத்தப்படுவது தெரியவந்தது.

இதனால் அந்த வாகனங்களுக்கு டன்னுக்கு ரூ.1000 வீதம் ஒவ்வொரு லாரிக்கும் சுமார் ரூ.20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்ற ராட்சத லாரிகளை அங்கிருந்த எடை நிலையத்திற்கு கொண்டு சென்று போலீசார் முன்னிலையில் எடை போடப்பட்டது.

பெரும்பாலான லாரிகளில் 13 டன் முதல் 20 டன் வரை கூடுதல் கனிம வளங்கள் இருப்பது தெரியவந்தது. அவைகளுக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒருசில லாரி டிரைவர்கள் தங்களது லாரிகளை அப்படியே சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர்.இந்த வழித்தடத்தில் தமிழக எல்லையில் தினமும் தீவிர சோதனை நடத்த பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

Topics

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories