சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் வீரா, பைரவா..

Published:

சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் வீரா, பைரவா என இரு பெல்ஜியம் நாட்டு மோப்ப நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய தொழிற்படை போலீசார்  மத்திய தொழிற்படையினர் உடைமைகள், வாகன சோதனை போன்ற பாதுகாப்பு பணிக்காக மோப்ப நாய்களை பயன்படுத்தி வருகின்றனர்.

விமான நிலைய பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழிற்படை போலீசார்  2 நாய் குட்டிகளை சேர்த்து உள்ளனர். இந்த மோப்பநாய் குட்டிகள் பிறந்து 86 நாட்களான பெல்ஜிய மாலினோயிஸ் வகையை சேர்ந்தது. இந்த நாய் குட்டிகள் மோப்ப சோதனைக்காக 6 மாத பயிற்சிக்கு பெங்களூருவில் உள்ள பயிற்சி கல்லூரிக்கு அனுப்பப்படுகிறது. அங்கு இவற்றுக்கு, வெடி பொருட்களை கண்டறியும் பணிக்கான மோப்ப பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்த இரு நாய் குட்டிகளுக்கு வீரா, பைரவா என இந்திய விமான நிலைய ஆணையக விஜிலென்ஸ் தலைமை அதிகாரி அமல் கார்க், சென்னை விமான நிலைய ஆணையக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் பெயர் சூட்டி உடைகளை அணிவித்தனர். நாய் குட்டிகளுக்கு மாலை அணிவித்து பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

202205110803417366 Belgian sniffer dogs enlist in Chennai airport security SECVPF - 2026
ALSO READ:  வித்யா ததாதி விநயம்! பணிவே வெற்றியாளரின் உன்னதப் பண்பு!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img