மாணவர்களின் அத்துமீறிய செயல்களை கண்டிக்க நடவடிக்கை..

Published:

சமீபகாலமாக மாணவர்களின் வன்முறை செயல்பாடுகள் ஆசிரியர்கள் மத்தியில் கடும் மனவேதனையை உருவாக்கியுள்ள நிலையில் உச்சத்தில் நிலை தவறி நடந்துகொள்ளும் மாணவர்களை கண்டிக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

சில இடங்களில் மாணவர்களின் பல அத்துமீறிய செயல்களால் பல ஆசிரியர்கள் மாணவர்களை எதிர்கொள்ளவே அச்சம்படும் நிலை எழுந்துள்ளது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள சில அறிவிப்புகள், ஆசிரியர்கள் மத்தியில் பிள்ளைகளை கண்டிக்கும் பெற்றோர் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ தொல்லை கொடுக்கும் மாணவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், பள்ளி மாற்று சான்றிதழில் அதன் காரணங்களை குறிப்பிட்டு, பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என்பதே தமிழக அரசின் அந்த அறிவிப்பு. மொபைல் போன் பள்ளிக்கு கொண்டு வர விதிக்கப்பட்டுள்ள தடை இவைகளை ஆசிரியர் கள் வரவேற்றுள்ளனர்.பெற்றோர்களும் இந்த கட்டுப்பாடுகள் சேட்டை மாணவர்களை உஷார் படுத்தும் என்பதால் வரவேற்றுள்ளனர்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!
images 39 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img