திருப்பூரிலிருந்து பாம்புகளை கடத்தி கேரளாவில் விற்பனை செய்ய முயன்ற 5 பேர் கைது..

தமிழ்நாட்டில் திருப்பூரிலிருந்து இருதலை பாம்புகளை கடத்தி வந்து கேரளாவில் விற்பனை செய்ய முயன்ற 5 பேரை கேரள வனத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, கோழிக்கோடு வனத்துறை விஜிலன்ஸ் அதிகாரி சுனில் குமாருக்கு  ஒரு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் உதவியுடன் குறிப்பிட்ட வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர்.அபோது வீட்டினுள் இருந்த 5 பேரும் அதிகாரிகளை கண்டதும் தப்பி ஓட முயன்றார்கள். வனத்துறை அதிகாரிகள் அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர்.

பின்பு அவர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்தபோது ஒரு பையில் இரண்டு இருதலை பாம்புகள் இருப்பது தெரியவந்தது. அதிகாரிகள் பாம்புகளை பறிமுதல் செய்து ஐந்து பேரையும் கைது செய்து அவர்கள் வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பின்பு 5 பேரையும் கருவரகுண்டு வனத்துறை தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் 5 பேரும் தமிழ்நாடு திருப்பூரை சேர்ந்த ராஜாமுகமது ( 39),கேரள மாநிலத்தை சேர்ந்த அப்துல் கரீம் (42) ,கமருதீன் (40) ,அனிபா முகமது (46), ஆனந்தன் (28) என்பது தெரிய வந்தது. இவர்கள் ஐந்து பேரும் திருப்பூரிலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்து 2 தலையுள்ள பாம்புகளை வாங்கி வந்து 10 லட்சம் ரூபாய்க்கு கேரளாவில் ஒரு நபருக்கு விற்பனை செய்வதற்காக முயற்சி செய்ததாகவும்,அதனால் ஐந்து பேரும் இரண்டு பாம்புகளுடன் அப்துல்கரீம் வீட்டில் வந்து தங்கி இருந்ததாகவும் தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பாக அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாகவும்,பாம்பை விலைக்கு வாங்குவதாக கூறிய நபரை தேடி வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

713268 07 kerala 30 05 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

Topics

மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

Entertainment News

Popular Categories