கப்பல் படையில் அதிகாரியாக தேர்வான படுகர் சமுதாய பெண்..

நீலகிரி மாவட்டத்தில் படுகர் சமுதாயத்தில் இருந்து பெண் ஒருவர் கப்பல் படையில் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்வாகியுள்ளமீராவுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஊட்டி அருகே கேத்தி கிராமத்தில் உள்ள அச்சனக்கல் பகுதியைச் சோ்ந்தவா் ரவீந்திரநாத் மாலதி தம்பதியர் மகள் மீரா (23). ரவீந்திரநாத் ராணுவ மருத்துவமனையில் தொழில்நுட்ப நிபுணராக நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ மருத்துவமனை மட்டுமின்றி நாட்டின் பல்வேறு ராணுவ மருத்துவமனைகளில் பணியாற்றியுள்ளாா்

images 74 - 2026

இதன் காரணமாக இவரது மகள் மீராவை தனது பணி மாறுதல் செல்லும் ஊா்களுக்கு எல்லாம் அழைத்துச்சென்று அங்குள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலேயே படிக்க வைத்துள்ளாா்.இவா் கோவையில் பணிபுரிந்தபோது தனது மகள் மீராவை அங்குள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் படிக்க வைத்தார்.

மீராவுக்கு இந்திய ராணுவத்தில் சோ்ந்து பணியாற்ற வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டது. இதற்காக அவர் கடந்த ஆண்டு நடந்த ஒருங்கிணைந்த ராணுவப் பணிகளுக்கான தோ்வினை எழுதினார். அதில் மீரா கப்பல் படைக்கான பிரிவில் தோ்ச்சி பெற்றாா்.

இதைத் தொடா்ந்து, மீராவுக்கு கேரள மாநிலம் கண்ணூா் அருகே உள்ள எஜிமாலா கப்பல் படைத் தளத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. 6 மாதம் பயிற்சியில் பங்கேற்றார்.

பயிற்சிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் மீரா விரைவில் கப்பல் படைக்கு அதிகாரியாக தலைமை ஏற்க உள்ளார்.பயிற்சியை முடித்த அவர் நேற்று தனது பெற்றோருடன், தனது சொந்த ஊரான நீலகிரியில் உள்ள அச்சனக்கல்லுக்கு வந்தாா். அங்கு அவருக்கு அந்த ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். முன்னாள் ராணுவ வீரர்கள் அமைப்பு சார்பில் இவருக்கு பாராட்டு விழா நடந்தது.

இதில் ஊட்டி ஒன்றிய தலைவர் மாயன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மீராவுக்கு பொன்னாடை போர்த்தி கவுரப்படுத்தி வாழ்த்துகளை தெரிவித்தார்.

இதுகுறித்து மீரா கூறியதாவது,

எனது தந்தை ராணுவத்தில், பணியாற்றியதால் எனக்கும் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை சிறுவயதிலேயே இருந்தது.

அதற்கேற்ப கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் இந்தியை முதன்மையான மொழியாக கொண்டு படித்ததால் எனக்கான பயிற்சிகள் எளிமையானது. தற்போது கண்ணூரில் உள்ள தேசிய கப்பல்படை பயிற்சி மையத்தில் 6 மாத பயிற்சியை முடித்துள்ளேன்.இதை தொடர்ந்து சப்-லெப்டினென்ட் என்ற கப்பல் படை அதிகாரி பதவி வழங்கப்பட்டு கொச்சியில் உள்ள கப்பல்படை தளத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளேன் என அவர் கூறினார்.

ராணுவ பணி என்றாலே அதில் பெண்களுக்கு அதிகளவில் விருப்பம் இருக்காது என்பதும், குறிப்பாக நீலகிரி போன்ற மலை மாவட்டங்களை சேர்ந்த பெண்களுக்கு வாய்ப்புகள் அதிகளவில் இருக்காது என்பதையெல்லாம் தகர்த்து படுகர் சமுதாயத்தில் இருந்து கப்பல் படையில் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

Topics

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories