மதுரையில் கொள்ளையடித்த நகை கைக்கு எட்டி வாய்க்குள் செல்லாத கதையாய்…

மதுரையில் அடகு கடையில் இருந்து அரை கிலோ நகையுடன் லாக்கரை தூக்கி சென்ற கும்பல், அதை உடைக்க முடியாததால் குப்பை வண்டியில் வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடகுகடை லாக்கர் மதுரை ஆத்திக்குளம் பகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதன். இவர் புதூர் ஜவஹர்புரம் பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல் காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு நகை வைக்கும் லாக்கர் பெட்டியை காணவில்லை. உடனே அவர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் லாக்கர் பெட்டி கொள்ளையடிக்கப்பட்டது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவான கைரேகைகளை சேகரித்தனர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்தனர்.

ALSO READ:  பிஜேபி., உள்ள வந்துடும்!

இதற்கிடையில் மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை எடுக்க வந்தனர். அப்போது அங்கு ஒரு குப்பை வண்டியில் லாக்கர் பெட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த லாக்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அந்த பெட்டியை மீட்டு கடை உரிமையாளரிடம் கொடுத்தனர். அவர் பெட்டியை திறந்து பார்த்த போது அதில் அரை கிலோ நகை மற்றும் 21 ஆயிரம் ரூபாய் இருந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அடகு கடையில் கொள்ளையடிக்க வந்த ஆசாமிகள், லாக்கர் பெட்டியை உடைக்க முடியாததால் அதை வெளியே கொண்டு வந்தனர். அந்த நேரத்தில் அந்த பகுதியில் போலீசார் நடமாட்டம் இருந்ததையொட்டி அந்த பெட்டியை குப்பை வண்டியில் வீசிவிட்டு தப்பியது தெரியவந்தது. மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி, அவர்களை தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

725032 13 - 2026
ALSO READ:  ஈரான் விவகாரத்தில்... காங்கிரஸின் ‘யு டர்ன்’!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

பஞ்சாங்கம் மே 28 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

Topics

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

பஞ்சாங்கம் மே 28 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

Entertainment News

Popular Categories