December 6, 2025, 5:15 PM
29.4 C
Chennai

கேரளாவில் ஒரு மாதத்திற்கு மேலாக ஆடம்பர காரில் பயணித்த ராஜநாகம்..

screenshot20696 1662037792 - 2025
screenshot20687 1662037801 - 2025

கேரளா மாநிலத்தில் ஒரு வாரமாக 200 கி.மீ. தூரம் சொகுசாக காரில் பயணித்த ராஜநாகம் ஒன்று வனத்துறையினரால் பிடிபட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் சுஜித். இவர் வேலை விஷயமாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காரில் மலப்புரம், வழிக்கடவு சென்றார், அப்போது தான் ஓட்டி வந்த காரை அடர்ந்த காட்டு பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்தாராம்.இந்த நிலையில் அந்த காரில் ஒரு ராஜநாகம் ஏறிக் கொண்டது. இதை அப்பகுதியில் உள்ள மக்கள் பார்த்துள்ளனர். உடனே சுஜித்திடம் கூறினர். அவரும் வனத்துறையினரை வரவழைத்து தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை.

பாம்பு காரினுள் போயிருக்கலாம். ஆனால் அங்கு தனக்கு எந்த இரையும் கிடைக்கவில்லை என்பதை வெளியேறி காட்டுக்குள் போயிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அரை மனதுடன் காரை எடுத்துக் கொண்டு கோட்டயத்திற்கு வந்தார்.எனினும் அவருக்கு பாம்பு பயம் இருந்து கொண்டே இருந்தது. இதையடுத்து காரை சர்வீஸ் விட்டு பார்த்தார். அப்போது அந்த பாம்பு கிடைக்கவில்லை. இதையடுத்து அந்த பாம்பு அதிகாரிகள் சொன்னது போல் போய்விட்டதாக கருதிய சுஜித் ஒரு மாதகாலமாக தனது மனைவி குழந்தைகளுடன் அதே காரில் 200 கி.மீ. தூரம் பயணித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காருக்குள் பாம்பின் சட்டை கழற்றப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பாம்பு பிடி மன்னன் வாவா சுரேஷை அழைத்து காரை முற்றிலுமாக பரிசோதனை செய்தார். அப்போதும் பாம்பு தென்படவில்லை.

இந்த நிலையில் சுஜித்தின் வீட்டருகே பெரிய பாம்பு ஊர்ந்து சென்றதை கண்ட சுஜித், உடனடியாக வனத்துறையினருக்கு தெரிவித்தார். அவர்கள் வந்து 10 அடி நீள பாம்பை பிடித்தனர். மீண்டும் வழிக்கடவு வனப்பகுதிக்கே கொண்டு போய் விட்டனர். ஒரு மாதத்திற்கு மேலாக ஆடம்பர காரில் பயணம் மேற்கொண்ட ராஜநாகத்தை நினைத்து சுஜித் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர். ஒரு வேளை யாரையாவது தீண்டியிருந்தால் என்ன ஆகியிருக்கும். மிக கொடூரமான விஷப்பாம்பு என்பதால் நினைத்தாலே ஈரக்குலையே நடுங்குகிறது என்றனர். இச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories