படித்தது ஏரோனாட்டிக்கல் பாக்குறது வைத்தியம்

images 51 1 - 2026

ஏரோனாட்டிக்கல் படித்துவிட்டு, மருத்துவமனை நடத்தி வந்த போலி மருத்துவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செம்பியன்(35). மருத்துவரான இவர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் இணையதளத்தில் தனது லைசென்ஸை புதுப்பிக்கும் பணியை மேற்கொண்டார்.

images 47 1 - 2026
செம்பியன்

பலமுறை முயற்சி செய்தும் புதுப்பிக்க முடியவில்லை.
இதையடுத்து அவர் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவக் கவுன்சில் (தமிழகம்) அலுவலகத்துக்கு வந்து இதுகுறித்து விசாரித்தார்.

இவரது லைசென்ஸை வேறொருவர் புதுப்பித்திருப்பது தெரியவந்தது.அதிர்ச்சி அடைந்த செம்பியன் இதுகுறித்து உடனடியாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதன்படி, அண்ணாநகர் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அப்போது, மருத்துவர் செம்பியன் பெயரில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு செம்பியன் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த செம்பியன்(36) கடந்த 2019-ம் ஆண்டு ஏரோனாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளார்.

சிறு வயதிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்று ஆசைப்பட்ட செம்பியன் குறுக்கு வழியில் மருத்துவராகத் திட்டமிட்டு மெடிக்கல் கவுன்சில் இணையதளத்துக்குச் சென்று செம்பியன் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள மருத்துவர்களின் பட்டியலை எடுத்துள்ளார். அதில் இவரது பெயரில் பல பேர் இருந்தாலும் வயது வித்தியாசம் அதிகம் இருந்தது.

தீவிரமாகத் தேடிய போது, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரான செம்பியன் என்பவரின் வயது ஒத்துப்போயுள்ளது.
இதையடுத்து உண்மையான மருத்துவர் செம்பியன் புகைப்படம் மற்றும் முகவரியை நீக்கிவிட்டு, இவரது புகைப்படம் மற்றும் முகவரியை மாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

அதன் பிறகு போலி மருத்துவர் செம்பியன் கடந்த 2021-ம் ஆண்டு முதல் தரமணியில் மருந்தகத்துடன் கூடிய மருத்துவமனையை நடத்தி வந்துள்ளார்.
சிகிச்சை தொடர்பாகச் சந்தேகம் ஏற்பட்டபோதெல்லாம் யூடியூப் உதவியுடன் தகவல்களைத் திரட்டிசிகிச்சை அளித்துள்ளார்.

இவர் பலமருத்துவம் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளார். இதையடுத்து அவரை கைது செய்துள்ளோம். மோசடிக்கு உடந்தையாக வேறு யாரேனும் உள்ளார்களா என விசாரித்து வருகிறோம் என்றனர்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!
images 45 1 - 2026
சுதர்சன் குமார்

இந்த நிலையில் போலீசார் எண்ணூர், நேதாஜி நகரைச்சேர்ந்த போலி மருத்துவர் சுதர்சன் குமார் (55). கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

இவர் மருத்துவர் படிக்காமல், 30ஆண்டுகளாக கிளினிக் என்ற பெயரில் அதே பகுதியில் மருத்துவமனை நடத்தி வந்துள்ளார். அவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories