December 16, 2025, 12:14 PM
25.6 C
Chennai

காரியாபட்டி அருகே‌ ஜல்லிக்கட்டு திடீர் ரத்து..

IMG 20230305 WA0060 - 2025

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூரில் ஸ்ரீ அழகிய நாச்சியம்மன் சாமி, பெரிய கருப்பண்ணசாமி திருக்கோயில் மாசி களரி பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் திடீர் ரத்தால் ஏமாற்றத்துடன் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் திரும்பிச் சென்றனர்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூரில் ஸ்ரீஅழகியநாச்சி அம்மன் சாமி, மற்றும் பெரிய கருப்பண்ணசாமி திருக்கோயில் மாசி களரி பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.

அதனை ஒட்டி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது இதற்காக மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிவுறுத்தலின் பேரில் ஆன்லைனில் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளை உரிமையாளர்கள் தங்கள் காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக விண்ணப்பித்திருந்தனர். அதில் 600 காளைகள் போட்டியில் பங்கேற்பதற்காக தேர்வு செய்யப்பட்டிருந்தன 450 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர்.

இன்று காலை 8 மணியளவில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை முன்னிட்டு ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வந்தன. இதில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாச பெருமாள் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போட்டியில் பங்கேற்பதற்காக மதுரை, விருதுநகர் ராமநாதபுரம், தூத்துக்குடி, திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காளை உரிமையாளர்கள் தங்களது காளைகளை அழைத்து வந்திருந்தனர். இந்நிலையில் இந்த போட்டிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு குறைபாடுகள் காரணமாகவும்,போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை, எனக் கூறி பொதுப்பணித்துறை அனுமதி வழங்க மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும் காளைகள் பதிவு அனைத்தும் ஆன்லைனில் இருந்ததால் உள்ளூர் காளைகள் எதுவும் பதிவு செய்ய முடியவில்லை எனவும் இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடயே பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் போதிய பரிசு பொருட்களும் இல்லை எனவும் கூறப்படுகிறது. நிலையில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற இருந்த நிலையில் திடீரென போட்டிகளை ரத்து செய்து மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஜல்லிக்கட்டு போட்டிகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் காளை உரிமையாளர்கள் மாடுபிடி வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தங்கள் காளை வெற்றி பெறும் என்ற மகிழ்ச்சியுடன் நீண்ட தூரம் தங்களது காளைகளை அழைத்து வந்த காளை உரிமையாளர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆரன்முழா பார்த்தசாரதி கோயிலில் இருந்து… டிச.23ல் ஐயப்பனுக்கு தங்க அங்கி!

அன்று மாலை சுவாமிஜி தங்க அங்கி அணிவித்து தீபாராதனை வழிபாடு நடத்தி பின்னர் இந்த தங்க அங்கி ஆரன்முழா பார்த்தசாரதி கோவிலுக்கு மீண்டும் கொண்டுவரப்படும்.

பயங்கரவாதம்: முதிர்ச்சியான விவாதம் தேவை!

பயங்கரவாத செயல்களை பற்றி விவாதிக்கும் போது, 'நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்' என்பதற்கும் 'நான்தான் ஏற்கனவே சொன்னேன் இல்லையா' என்ற கூற்றுக்கும் இடம் தரலாகாது.

ஆரியங்காவு ஐயன் கோயிலில் இன்று திருவாபரண வரவேற்பு; திருக்கல்யாண உத்ஸவம் தொடக்கம்!

வரும் 25ஆம் தேதி பாண்டியன் முடிப்பு என்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியும் 26 ஆம் தேதி திருக்கல்யாண விழாவும் 27 ஆம் தேதி மண்டல பூஜை வழிபாடு நடைபெறும்.

பஞ்சாங்கம் டிச.16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சங்கோவில் தர்மசாஸ்தா கோயிலில் மண்டலபூஜை நாளை தொடக்கம்!

அச்சன்கோவில் தர்ம சாஸ்தா கோவிலில் மண்டல பூஜை தேரோட்டம் ஆராட்டு விழா...

Topics

ஆரன்முழா பார்த்தசாரதி கோயிலில் இருந்து… டிச.23ல் ஐயப்பனுக்கு தங்க அங்கி!

அன்று மாலை சுவாமிஜி தங்க அங்கி அணிவித்து தீபாராதனை வழிபாடு நடத்தி பின்னர் இந்த தங்க அங்கி ஆரன்முழா பார்த்தசாரதி கோவிலுக்கு மீண்டும் கொண்டுவரப்படும்.

பயங்கரவாதம்: முதிர்ச்சியான விவாதம் தேவை!

பயங்கரவாத செயல்களை பற்றி விவாதிக்கும் போது, 'நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்' என்பதற்கும் 'நான்தான் ஏற்கனவே சொன்னேன் இல்லையா' என்ற கூற்றுக்கும் இடம் தரலாகாது.

ஆரியங்காவு ஐயன் கோயிலில் இன்று திருவாபரண வரவேற்பு; திருக்கல்யாண உத்ஸவம் தொடக்கம்!

வரும் 25ஆம் தேதி பாண்டியன் முடிப்பு என்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியும் 26 ஆம் தேதி திருக்கல்யாண விழாவும் 27 ஆம் தேதி மண்டல பூஜை வழிபாடு நடைபெறும்.

பஞ்சாங்கம் டிச.16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சங்கோவில் தர்மசாஸ்தா கோயிலில் மண்டலபூஜை நாளை தொடக்கம்!

அச்சன்கோவில் தர்ம சாஸ்தா கோவிலில் மண்டல பூஜை தேரோட்டம் ஆராட்டு விழா...

கொத்தலு: இராஜபாளையம் ராஜூக்களின் பாரம்பரியம்!

ஒவ்வொரு சாதி தலைவர்களும் இது போல பின்பற்ற வேண்டும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகின்றது, அதுவும் இந்த காலகட்டத்தில் மிக அவசியம் கூட! 

ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சுட்டதில் 16 பேர் உயிரிழப்பு!

இப்படி துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு பயங்கரவாதச் செயகளில் ஈடுபடுவது பாகிஸ்தானின் வொய்ட்காலர் டெரரிஸம் குறித்து இந்தியா குறிப்பிடுவதை உண்மையாக்கி இருக்கிறது.

பஞ்சாங்கம் டிச.15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories