December 6, 2025, 6:47 AM
23.8 C
Chennai

சென்னை கோவையில் ‘ஹோலி’ உற்சாக கொண்டாட்டம்..

images 28 - 2025

சென்னையில் ‘ஹோலி’ உற்சாக கொண்டாட்டம்- ஒருவருக்கொருவர் வண்ண கலர்பொடி பூசி மகிழ்ச்சி சவுகார்பேட்டை, வேப்பேரி, தியாகராயநகர், பட்டாளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் வடமாநில மக்கள் வண்ண கலர் பொடி பூசி அன்பை பரிமாறிக்கொண்டனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவருக்கொருவர் கலர் பவுடரை பூசியும், சாயம் கலந்த தண்ணீரை ஊற்றியும் மகிழ்ந்தனர்.

500x300 1846567 holi - 2025

அன்பை பரிமாறக்கூடிய ஹோலி பண்டிகை வட மாநிலங்களில் மட்டுமின்றி கடந்த சில வருடங்களாக தமிழகத்திலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னையில் இன்று வடமாநிலத்தவர்கள் இந்த பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். டெல்லி, ராஜஸ்தான், பீகார், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், குஜராத், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் சென்னையில் கணிசமாக வசித்து வருகின்றனர். அவர்கள் ஹோலி பண்டி கையை கொண்டாடும் விதமாக நேற்று இரவு பழையன கழிதல் என்ற அடிப்படையில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர். இன்று ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சவுகார்பேட்டை, வேப்பேரி, தியாகராயநகர், பட்டாளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் வடமாநில மக்கள் வண்ண கலர் பொடி பூசி அன்பை பரிமாறிக்கொண்டனர்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவருக்கொருவர் கலர் பவுடரை பூசியும், சாயம் கலந்த தண்ணீரை ஊற்றியும் மகிழ்ந்தனர்.

அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் குடும்பம் குடும்பமாக வெளியில் வந்து ஹோலியை கொண்டாடினர். வாலிபர்கள், இளம்பெண்கள் அன்பை வெளிப்படுத்தும் வகையில் கலர் பூசினர். கார், மோட் டார் சைக்கிள்கள் போன்ற வாகனங்களில் சென்றும் வீதிகளில் ஆரவாரமாக கொண்டாடினர்.

காலையில் இருந்து இரவு வரை ஒருவரையொருவர் விரட்டி சென்று வண்ண கலர் பொடிகளை பூசினர். சென்னையில் பல்வேறு இடங்களில் வடமாநிலத்தவர்கள் ஒருவருக்கொருவர் நேரிலும், போனிலும் ஹோலி வாழ்த்துக்களை கூறி அன்பை வெளிப்படுத்தினர். சிலர் கட்டிப்பிடித்து ஆட்டம், பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

கோவையிலும் வடமாநில மக்கள் வசிக்கும் பகுதியில் ஹோலி கொண்டாட்டம் இன்று நாள் முழுவதும் களைகட்டியது.கொளுத்தும் வெயிலிலும் ஹோலி கொண்டாட்டம் அமர்க்களமாக நிகழ்ந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories