காணக் கிடைக்காத டி20 ஆட்டம்: மேற்கு இந்தியத் தீவுகள் vs தென் ஆப்பிரிக்கா!

sa vs wi - 2026
#image_title

— முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் —

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றது. அந்த நிலையில் 2ஆவது போட்டி மார்ச் 26ஆம் தேதியன்று செஞ்சூரியனில் நடைபெற்றது.

அதில் பூவா தலையா வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

எனவே முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 20 ஓவரில் 258/5 ரன்கள் குவித்தது. அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வெஸ்ட் இண்டீஸ் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாகவும் உலகச் சாதனை படைத்தது.

அந்த அணியின் தொடக்க வீரர் ப்ரெண்ட் கிங் 1 ரன்னில் அவுட்டானாலும் 2வது விக்கெட்டுக்கு 135 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜான்சன் சார்லஸ் வெறும் 39 பந்துகளில் சதமடித்து டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்தார். மொத்தம் 10 பவுண்டரி 11 சிக்சர்களுடன் 118 (46) ரன்கள் விளாசி அவுட்டான அவருடன் தனது பங்கிற்கு அதிரடி காட்டிய கெயில் மேயர்ஸ் 5 பவுண்டரின் 4 சிக்சருடன் 51 (27) ரன்கள் எடுத்தார்.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

இறுதியில் கேப்டன் ரோவ்மன் போவல் 28 (19) ரோமாரியா செபார்டு 41* (18) ஓடின் ஸ்மித் 11* (5) ரன்கள் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்தனர். தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக மார்க்கோ யான்சன் 3 விக்கெட்களை சாய்த்தார்.
அதன் பின்னர் 259 என்ற கடினமான இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்கா சொந்த மண்ணில் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் பந்து வீச்சில் வாங்கிய அத்தனை அடியையும் பேட்டிங்கில் பதிலடியாக முரட்டு அடி கொடுத்தது என்றே சொல்லலாம்.

குறிப்பாக அந்த அணியின் தொடக்க வீரர் குயிட்டன் டீ காக் – ரீசா ஹென்றிக்ஸ் ஆகியோர் வெறித்தனமாக பேட்டிங் செய்து 6 ஓவரிலேயே 102/0 ரன்கள் குவித்து மிரட்டல் தொடக்கம் கொடுத்தனர். அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பவர் பிளே ஓவர்களில் 100+ ரன்கள் குவித்த முதல் அணி (முழு அந்தஸ்து பெற்ற அணிகளில்) என்ற உலக சாதனையும் தென்னாப்பிரிக்கா படைத்தது. அதே வேகத்தில் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை வெறித்தனமாக அடித்து நொறுக்கிய அந்த ஜோடி 10.5 ஓவரிலேயே 152 ரன்கள் ஓப்பனிங் பார்ன்ஷிப் அமைத்து அபார தொடக்கம் கொடுத்த போது 9 பவுண்டரி 8 சிக்ஸருடன் சதமடித்த குயின்டன் டீ காக் 100 (44) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

அடுத்து வந்த ரீலி ரோசவ் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 16 (4) ரன்களும் மறுபுறம் வெளுத்து வாங்கிய ரீசா ஹென்றிக்ஸ் 11 பவுண்டர் 2 சிக்சருடன் 68 (28) ரன்களும் எடுத்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தனர். அந்த நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் மில்லர் 10 (10) ரன்களில் அவுட்டானாலும் அற்புதமான தொடக்கம் கிடைத்ததை பயன்படுத்திய கேப்டன் ஐடன் மார்க்கம் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 38* (21) ரன்களும் ஹென்ட்ரிச் கிளாசன் 16* (7) ரன்களும் விளாசி மெகா பினிஷிங் கொடுத்தனர்.

அதனால் 18.5 ஓவரிலேயே 259/4 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா 6 விக்கெட் வித்யாசத்தில் வென்று சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 250+ ரன்களுக்கும் மேல் வெற்றிகரமாக சேசிங் செய்த முதல் அணியாக உலக சாதனை படைத்தது. அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை வெற்றிகரமாக சேசிங் செய்த அணியாகவும் தென் ஆப்பிரிக்கா அணி உலகச் சாதனை படைத்தது.

அந்த முன்னதாக கடந்த 2005ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 434 ரன்களை வெறித்தனமாக சேசிங் செய்து ஒருநாள் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த தென்னாப்பிரிக்கா தற்போது அதே போல வெஸ்ட் இண்டீஸ் எதிராகவும் அதே முறையில் சேசிங் செய்து டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்துள்ளது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories