காணக் கிடைக்காத டி20 ஆட்டம்: மேற்கு இந்தியத் தீவுகள் vs தென் ஆப்பிரிக்கா!

sa vs wi - 2026
#image_title

— முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் —

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றது. அந்த நிலையில் 2ஆவது போட்டி மார்ச் 26ஆம் தேதியன்று செஞ்சூரியனில் நடைபெற்றது.

அதில் பூவா தலையா வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

எனவே முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 20 ஓவரில் 258/5 ரன்கள் குவித்தது. அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வெஸ்ட் இண்டீஸ் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாகவும் உலகச் சாதனை படைத்தது.

அந்த அணியின் தொடக்க வீரர் ப்ரெண்ட் கிங் 1 ரன்னில் அவுட்டானாலும் 2வது விக்கெட்டுக்கு 135 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜான்சன் சார்லஸ் வெறும் 39 பந்துகளில் சதமடித்து டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்தார். மொத்தம் 10 பவுண்டரி 11 சிக்சர்களுடன் 118 (46) ரன்கள் விளாசி அவுட்டான அவருடன் தனது பங்கிற்கு அதிரடி காட்டிய கெயில் மேயர்ஸ் 5 பவுண்டரின் 4 சிக்சருடன் 51 (27) ரன்கள் எடுத்தார்.

ALSO READ:  பிஜேபி., உள்ள வந்துடும்!

இறுதியில் கேப்டன் ரோவ்மன் போவல் 28 (19) ரோமாரியா செபார்டு 41* (18) ஓடின் ஸ்மித் 11* (5) ரன்கள் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்தனர். தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக மார்க்கோ யான்சன் 3 விக்கெட்களை சாய்த்தார்.
அதன் பின்னர் 259 என்ற கடினமான இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்கா சொந்த மண்ணில் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் பந்து வீச்சில் வாங்கிய அத்தனை அடியையும் பேட்டிங்கில் பதிலடியாக முரட்டு அடி கொடுத்தது என்றே சொல்லலாம்.

குறிப்பாக அந்த அணியின் தொடக்க வீரர் குயிட்டன் டீ காக் – ரீசா ஹென்றிக்ஸ் ஆகியோர் வெறித்தனமாக பேட்டிங் செய்து 6 ஓவரிலேயே 102/0 ரன்கள் குவித்து மிரட்டல் தொடக்கம் கொடுத்தனர். அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பவர் பிளே ஓவர்களில் 100+ ரன்கள் குவித்த முதல் அணி (முழு அந்தஸ்து பெற்ற அணிகளில்) என்ற உலக சாதனையும் தென்னாப்பிரிக்கா படைத்தது. அதே வேகத்தில் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை வெறித்தனமாக அடித்து நொறுக்கிய அந்த ஜோடி 10.5 ஓவரிலேயே 152 ரன்கள் ஓப்பனிங் பார்ன்ஷிப் அமைத்து அபார தொடக்கம் கொடுத்த போது 9 பவுண்டரி 8 சிக்ஸருடன் சதமடித்த குயின்டன் டீ காக் 100 (44) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

அடுத்து வந்த ரீலி ரோசவ் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 16 (4) ரன்களும் மறுபுறம் வெளுத்து வாங்கிய ரீசா ஹென்றிக்ஸ் 11 பவுண்டர் 2 சிக்சருடன் 68 (28) ரன்களும் எடுத்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தனர். அந்த நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் மில்லர் 10 (10) ரன்களில் அவுட்டானாலும் அற்புதமான தொடக்கம் கிடைத்ததை பயன்படுத்திய கேப்டன் ஐடன் மார்க்கம் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 38* (21) ரன்களும் ஹென்ட்ரிச் கிளாசன் 16* (7) ரன்களும் விளாசி மெகா பினிஷிங் கொடுத்தனர்.

அதனால் 18.5 ஓவரிலேயே 259/4 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா 6 விக்கெட் வித்யாசத்தில் வென்று சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 250+ ரன்களுக்கும் மேல் வெற்றிகரமாக சேசிங் செய்த முதல் அணியாக உலக சாதனை படைத்தது. அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை வெற்றிகரமாக சேசிங் செய்த அணியாகவும் தென் ஆப்பிரிக்கா அணி உலகச் சாதனை படைத்தது.

அந்த முன்னதாக கடந்த 2005ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 434 ரன்களை வெறித்தனமாக சேசிங் செய்து ஒருநாள் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த தென்னாப்பிரிக்கா தற்போது அதே போல வெஸ்ட் இண்டீஸ் எதிராகவும் அதே முறையில் சேசிங் செய்து டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்துள்ளது.

ALSO READ:  பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories