December 7, 2025, 10:48 PM
24.6 C
Chennai

வாஞ்சி நினைவு நாள்; அந்தணர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மரியாதை!

andhanar munnetrak kazhagam - 2025
#image_title

அந்தணர் முன்னேற்றக் கழகம் சார்பில் வீரன் வாஞ்சிநாதன் நினைவு நாளில், செங்கோட்டையில் உள்ள வீரவாஞ்சி சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

ஆங்கிலேயர்களுக்கு எதிரான நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியமான நிகழ்வாக வராலாற்றில் பதிவாகியுள்ள திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆஷ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், தன் இன்னுயிரைத் தியாகம் செய்த வீரன் வாஞ்சிநாதனின் பிறந்த ஊரான செங்கோட்டையில், வாஞ்சிநாதனது தியாகத்தைப் போற்றும் வகையில் வெண்கலச் சிலையும் மணிமண்டபமும் கட்டப்பட்டுள்ளது.

வஞ்சி உயிர்த்தியாகம் செய்த நாளான ஜூன் 17ம் தேதி இன்று செங்கோட்டை பேருந்து நிலையம் முன்னுள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு பல்வேறு அமைப்பினரும் தனிநபர்களும் அரசியல் கட்சிகளும் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.

அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் இன்று காலை வாஞ்சி மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதே நேரம் பேருந்து நிலையம் முன்னுள்ள வாஞ்சி வெண்கலச் சிலைக்கு, செங்கோட்டை பிராமண சமூகத்தினர், வாஞ்சி உயிர்த் தியாகம் செய்த காலை 10.41க்கு மாலை அணிவித்தனர். தொடர்ந்து திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பிராமண சங்கத்தினர், தென்காசி, கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக., பாஜக., கட்சி நிர்வாகிகள் என பலரும் மாலை அணிவித்தனர்.

தொடர்ந்து வாஞ்சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சியில், தமிழ்நாடு முழுவதும் இருந்து அந்தணர் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அந்தணர் முன்னேற்றக் கழகத்தின் தொண்டரணி மாநில செயலாளர் முத்துராமன், மாநில செயலாளர் சுரேஷ் சிவம், மாநில துணைத் தலைவர் முத்து சிவம், தூத்துக்குடி மாவட்டத் தலைவர் கணபதி, தென்காசி மாவட்டத்தின் சார்பில் கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாஞ்சிநாத ஐயர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

Topics

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories