சிதம்பரம் விவகாரத்தில்… சேகர் பாபுவுக்கு தேவநாதன் யாதவ் மிரட்டல்… அல்ல எச்சரிக்கை!

devanathan yadav - 2026

சமூகவலைத் தளங்களில் வெளியான போலி அறிக்கை தொடர்பாக, யாதவ மகா சபை தலைவர் டாக்டர் தி. தேவநாதன் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு மிரட்டல் அல்ல எச்சரிக்கை என்று குறிப்பிட்டு சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்… அவரது அறிக்கை

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த முதியவர் மீது தாக்குதல் நடத்திய தீட்சிதர்களை வன்மையாக கண்டிக்கிறோம் என எனது பெயரில் சமூகவலைத் தளங்களில் வெளியான கண்டன அறிக்கை போலியானது

திமுக விஷமிகள் சிலர் திட்டமிட்டு வெளியிட்ட இந்த போலியான அறிக்கையை யாரும் நம்ப வேண்டாம். சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களின் வழிபாட்டு உரிமையில் யாதவ மகா சபை எப்போதும் தலையிட்டதில்லை சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு வரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் செயல்பாடுகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ALSO READ:  அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து சிதம்பரம் தீட்சிதர்களுக்கு எதிராகப் பேசியும், அவர்களை மிரட்டியும், அவர்களின் வழிபாட்டு உரிமைகளில் தலையிட்டும் அராஜகப் போக்குடன் இந்து சமய அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி, தீட்சிதர்களின் பரம்பரை வழிபாடு பூஜை விஷயத்தில் இந்து சமய அறநிலையத்துறை தலையிட முடியாது. கோயில் நிர்வாகம், அரசின் கையில் இல்லாதபோது, தீட்சிதர்களை மிரட்டுவதும், காவல்துறையை ஏவிவிடுவதும் சரியான செயல்பாடுகள் அல்ல.

சிதம்பரம் கோயில் விவகாரத்தில் மூக்கை நுழைத்து குறிப்பிட்ட ஜாதியினருக்கு எதிராகவும், பொதுமக்களுக்கு எதிராகவும் இச்சமூகத்தை திருப்பிவிடும் விஷமத்தனமான செயல்பாடுகளையும் வன்மையாக கண்டிக்கிறேன். அமைச்சர் செந்தில்பாலாஜியின் வழியில் சேகர்பாபு செயல்படுவதாக தெரிகிறது. செந்தில்பாலாஜிக்கு ஏற்பட்ட அதே கதிதான் சேகர்பாபுவுக்கும் ஏற்படும். இந்த அராஜகப் போக்கை அவர் உடனடியாக கைவிட வேண்டும் என யாதவ் மகா சபை கேட்டுக் கொள்கிறது.

சேகர்பாபுவின் அத்துமீறிய நடவடிக்கைகளும், தீட்சிதர்களுக்கு எதிராக அவரது பேச்சையும் முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் இன்னமும் கண்டிக்கவில்லை? எனவே அமைச்சர் சேகர்பாபுவை உடனே பதவிநீக்கம் செய்ய வேண்டும்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

திருக்கோயில்கள் ஆன்மிக நம்பிக்கை இந்து தர்மத்திற்கு எதிரான கோட்பாடுகளை கொண்டுள்ள திமுகவின் இந்த செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளாவிடில் வரும் நாடாளுமன்றத் தேர்தல் மூலமாக மக்கள் இந்த ஆட்சிக்கு சாவுமணி அடித்துவிடுவார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

Entertainment News

Popular Categories