December 5, 2025, 3:40 PM
27.9 C
Chennai

சிதம்பரம் விவகாரத்தில்… சேகர் பாபுவுக்கு தேவநாதன் யாதவ் மிரட்டல்… அல்ல எச்சரிக்கை!

devanathan yadav - 2025

சமூகவலைத் தளங்களில் வெளியான போலி அறிக்கை தொடர்பாக, யாதவ மகா சபை தலைவர் டாக்டர் தி. தேவநாதன் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு மிரட்டல் அல்ல எச்சரிக்கை என்று குறிப்பிட்டு சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்… அவரது அறிக்கை

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த முதியவர் மீது தாக்குதல் நடத்திய தீட்சிதர்களை வன்மையாக கண்டிக்கிறோம் என எனது பெயரில் சமூகவலைத் தளங்களில் வெளியான கண்டன அறிக்கை போலியானது

திமுக விஷமிகள் சிலர் திட்டமிட்டு வெளியிட்ட இந்த போலியான அறிக்கையை யாரும் நம்ப வேண்டாம். சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களின் வழிபாட்டு உரிமையில் யாதவ மகா சபை எப்போதும் தலையிட்டதில்லை சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு வரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் செயல்பாடுகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து சிதம்பரம் தீட்சிதர்களுக்கு எதிராகப் பேசியும், அவர்களை மிரட்டியும், அவர்களின் வழிபாட்டு உரிமைகளில் தலையிட்டும் அராஜகப் போக்குடன் இந்து சமய அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி, தீட்சிதர்களின் பரம்பரை வழிபாடு பூஜை விஷயத்தில் இந்து சமய அறநிலையத்துறை தலையிட முடியாது. கோயில் நிர்வாகம், அரசின் கையில் இல்லாதபோது, தீட்சிதர்களை மிரட்டுவதும், காவல்துறையை ஏவிவிடுவதும் சரியான செயல்பாடுகள் அல்ல.

சிதம்பரம் கோயில் விவகாரத்தில் மூக்கை நுழைத்து குறிப்பிட்ட ஜாதியினருக்கு எதிராகவும், பொதுமக்களுக்கு எதிராகவும் இச்சமூகத்தை திருப்பிவிடும் விஷமத்தனமான செயல்பாடுகளையும் வன்மையாக கண்டிக்கிறேன். அமைச்சர் செந்தில்பாலாஜியின் வழியில் சேகர்பாபு செயல்படுவதாக தெரிகிறது. செந்தில்பாலாஜிக்கு ஏற்பட்ட அதே கதிதான் சேகர்பாபுவுக்கும் ஏற்படும். இந்த அராஜகப் போக்கை அவர் உடனடியாக கைவிட வேண்டும் என யாதவ் மகா சபை கேட்டுக் கொள்கிறது.

சேகர்பாபுவின் அத்துமீறிய நடவடிக்கைகளும், தீட்சிதர்களுக்கு எதிராக அவரது பேச்சையும் முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் இன்னமும் கண்டிக்கவில்லை? எனவே அமைச்சர் சேகர்பாபுவை உடனே பதவிநீக்கம் செய்ய வேண்டும்.

திருக்கோயில்கள் ஆன்மிக நம்பிக்கை இந்து தர்மத்திற்கு எதிரான கோட்பாடுகளை கொண்டுள்ள திமுகவின் இந்த செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளாவிடில் வரும் நாடாளுமன்றத் தேர்தல் மூலமாக மக்கள் இந்த ஆட்சிக்கு சாவுமணி அடித்துவிடுவார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories