May 18, 2025, 7:25 AM
28.1 C
Chennai

திருச்செந்துறை எழுப்பிய கேள்விகள்! புரிந்தால் சரி!

write thoughts
#image_title

திருச்சி – திருச்செந்துறை – சில சந்தேகங்கள்

டிசம்பர் 3 1866 இல் திருச்சி – ஈரோடு ( கரூர் வழியாக) ரயில் போக்குவரத்து தொடங்கியது. 

இந்த ரயில்வே தண்டவாளம் திருச்செந்துறை கோயிலில் (மதிலில்) இருந்து அதிக பட்சம் 150 மீட்டர் மட்டுமே. 

இந்தியன் ரயில்வே  அல்லது (அப்போதைய) பிரிட்டிஷ் அரசு இந்த தண்டவாளங்கள் போட நிலங்களை கையகப் படுத்தும்போது வக்ஃப் போர்ட் அனுமதி பெற்றதா? தெரியவில்லை. 

அரசு தொடக்கக் கல்வி பள்ளி கோவிலிலிருந்து 50 மீட்டர் தொலைவிலும் , உயர் நிலைப் பள்ளி வெறும் 20 மீட்டர் தொலைவிலும் உள்ளன. இவற்றைக் கட்டுகையில் தமிழக அரசு வக்ஃப் போர்ட் அனுமதி பெற்றதா ? தெரியவில்லை. சமீபத்தில் கட்டப்பட்ட வாட்டர் டேங்க் கோவிலில் இருந்து வெறும் 20 மீட்டர். அதற்கு அனுமதி …? 

தமிழக அரசும் மத்திய அரசும் இதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தால் பாலும் நீரும் அன்னப் பறவையால் பிரிக்கப் படுவது போல் உண்மையும் பொய்யும் பிரிக்கப் படலாம்.

திருச்செந்துறை – மேலும் சில சந்தேகங்கள் 

பொதுவாக அவர்கள் காட்டும் கணக்கு 1740-50 களில்  முகமது அலிகான் வாலாஜா காலத்தை. இத்தனைக்கும்,  அந்த நேரத்தில் சந்தா சாகிப்புக்கு அஞ்சி முகமது அலி திருச்சியில் ஒளிந்து கொண்டிருந்தார்.

ALSO READ:  மக்கள்தொகையாம்! தொகுதிக் குறைப்பாம்!! அட கழகமே... வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறதே!

குழிப் பெருச்சாளி போல் மறைந்து வாழ்ந்த அவர் இவ்வாறு அரசராக கிராமங்களை கொடுத்திருக்க முடியும் என்ற கேள்விக்கு விடை இல்லை. 

திருசினாபோலி முற்றுகையின் போது (Siege of Trichinopoly 1741) போரிட்டவர்கள் மராட்டியர்களும், சந்தா சாகிப்பும். இதில் முகமது அலி எங்கிருந்து வந்தார் என்ற கேள்விக்கும் இடமில்லை.

ஆற்காட்டுப் போருக்குப் பிறகு அந்த இடங்கள் அனைத்தும் அந்தந்த கிராம மக்களிடம் / நிலச் சுவாந்தாரர்களிடம்  இருந்து  வந்தது. வரி வசூலித்து நில ஆவணங்களை உருவாக்கும் பணியில் கிழக்கிந்திய கம்பெனி இருந்தது.

இதில் தமாஷ் என்னவென்றால் சந்தா சாகிப் (ஆங்கிலேய கிளைவ் இடம் தோற்றவன்! பிரெஞ்சு அடிவருடி!) திருச்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக ( முற்றுகையை முன்னிட்டு) ஒரு வரலாறு உண்டு. “ராஜ பேரிகை ” (சாண்டில்யன்) கதையை சரித்திர ஆவணமாக எடுத்தாலும் முகமது அலி இல்லை.  போரில் தோற்றுப் போன சந்தா சாகிப் தான் இருந்திருக்கிறான். 

ஒரு கால் டுமீலா தாப்பர் சரித்திரத்தை மாற்றி எழுதி விட்டாரோ?

ALSO READ:  அந்த உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது?!

1600களில் இருந்து எடுத்துக் கொண்டால்…

தமிழ் நாட்டில் முக்கால்வாசி இடங்கள் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஆட்சியிலும், தஞ்சாவூர் சார்ந்தவை மராட்டியர்களிடமும், நாயக்கர்கள் , தெற்கில் சேதுபதி மன்னரிடமும் இருந்திருக்கின்றன. இதில் எந்த முஸ்லீம் மன்னர் இத்தனை இடங்களை கொடுத்தார் என்று தெரியவில்லை. 

1600கள் தொடக்கம் வரை விஜயநகரப் பேரரசு வேறு இருந்திருக்கிறது !

கேவலமான தென்கிழக்காசியாவின் சாக்ரடீஸ்  விருது போல்,  அவர்களே தங்களுக்கு அடுத்தவன்  நிலங்களை பட்டா போட்டுக் கொண்டு, மானம் கெட்டு…

என்ன பிழைப்பு இது!? 

சரித்திரப் பூர்வமாக மறுக்க முடியாதவர்கள் வரவேண்டாம். எல்லாவற்றுக்கும் நான் லிங்க் கொடுத்தால் , நீங்கள் என்ன பூனைக்கு புது டிரஸ், யானைக்கு கோவணம் கட்டுவதிலா பிசி ? தேடுங்கள்!

ஈசாப் கதைகள்

இறக்கும் தருவாயில் உயில் எழுதும் தந்தை அத்தனை சொத்துக்களையும் அடிமை பெயரில் எழுதுகிறார். மகனுக்கு ” தந்தைக்கு உரிமையான ஏதாவது ஒன்று மட்டும்” என்று எழுதிவிட்டு இறந்து விடுகிறார். 

அடிமை சொத்துகளை எடுக்க வழக்கு வருகிறது. மகன் ” என் தந்தைக்கு சொந்தமான இந்த அடிமையை நான் எடுத்துக் கொள்கிறேன்” என்கிறான். 

ALSO READ:  கும்பமேளாவில் எட்டிப் பார்த்த தேச ஒற்றுமை

இது சிக்கலை புரிய வைப்பதற்காக மட்டும் சொல்லப் படும் கதை. வேறு எதுவும் இல்லை ! 

எதனால் கோவிலை target செய்து தங்களது உரிமை என்று சொல்கிறார்கள் என்று யோசித்தால் புரியும்.

கோவில்களைச் சுற்றியுள்ள நிலங்கள் கோவிலுக்குச் சொந்தமானவை. எனவே கோவில் எங்களுடையது என்று ஆவணப் படுத்திவிட்டால் நிலம் முழுவதும் தங்களுக்கே சொந்தம் என்ற வாதம் வைப்பார்கள். 

புரிந்தால் சரி !

  • டி.ஆர். சங்கர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 18 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குற்றாலம் பராசக்தி கல்லூரி மாணவியர் சேர்க்கை – விவரம்!

நேர்முகத்தேர்வு விவரங்களுக்கு கீழ்க்காணும் ~link 🔗~ஐ அழுத்தவும்

பெரியண்ணன் டிரம்ப்புக்கு… இந்திய தேசபக்தையின் கடிதம்!

ஏனெனில் அவருக்கு அரணாக 140 கோடியில் ஒரு சில உள்நாட்டு துரோகிகளை கழித்தால்கூட மீதமுள்ள மக்கள் உறுதுணையாக நிற்கிறோம். சத்தியம் சோதனைகளுக்கு ஆளானாலும் என்றும் தோற்றதில்லை தோற்பதுமில்லை.

வெளிவராத ரகசியங்கள்! என்ன செய்யப் போகிறது பாகிஸ்தான்?

மசூத் அஸார் குடும்பத்தினருக்கு 50,000 டாலர்கள் தந்திருக்கிறது பாகிஸ்தான். அதாவது நிவாரண நிதியாக! நம் இந்திய தாக்குதலில் பலியானவர்களுக்கு கொடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

மாமன் பட வெளியீடு; மதுரையில் சூரியின் ரசிகர்கள் கொண்டாட்டம்!

மதுரை திருநகர் பகுதிகளில் சூரியின் அகில இந்திய தலைமை ரசிகர் மன்றம் சார்பில் பெண் ரசிகைகள் 10 பேர் பால்குடம் எடுத்து ட்ரம் செட் முழங்க ரசிகர் மன்ற

Topics

பஞ்சாங்கம் மே 18 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குற்றாலம் பராசக்தி கல்லூரி மாணவியர் சேர்க்கை – விவரம்!

நேர்முகத்தேர்வு விவரங்களுக்கு கீழ்க்காணும் ~link 🔗~ஐ அழுத்தவும்

பெரியண்ணன் டிரம்ப்புக்கு… இந்திய தேசபக்தையின் கடிதம்!

ஏனெனில் அவருக்கு அரணாக 140 கோடியில் ஒரு சில உள்நாட்டு துரோகிகளை கழித்தால்கூட மீதமுள்ள மக்கள் உறுதுணையாக நிற்கிறோம். சத்தியம் சோதனைகளுக்கு ஆளானாலும் என்றும் தோற்றதில்லை தோற்பதுமில்லை.

வெளிவராத ரகசியங்கள்! என்ன செய்யப் போகிறது பாகிஸ்தான்?

மசூத் அஸார் குடும்பத்தினருக்கு 50,000 டாலர்கள் தந்திருக்கிறது பாகிஸ்தான். அதாவது நிவாரண நிதியாக! நம் இந்திய தாக்குதலில் பலியானவர்களுக்கு கொடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

மாமன் பட வெளியீடு; மதுரையில் சூரியின் ரசிகர்கள் கொண்டாட்டம்!

மதுரை திருநகர் பகுதிகளில் சூரியின் அகில இந்திய தலைமை ரசிகர் மன்றம் சார்பில் பெண் ரசிகைகள் 10 பேர் பால்குடம் எடுத்து ட்ரம் செட் முழங்க ரசிகர் மன்ற

பஹல்காம்: இந்தியாவைப் பெருமைப் படுத்தும் மோடி!

பல இந்தியர்கள் தமது நலன் அறியாத அப்பாவிகளாக இருந்தாலும், பல சமயங்களில் சரியான வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போடத் தெரியாமல் இருந்தாலும், அவர்களின் பூர்வ ஜென்ம பலன் மோடி காலத்தில் வேலை செய்கிறதோ?

‘சிங்காரவேலனே தேவா’ மூலம் நினைவில் நிற்கும் பாடலாசிரியர்!

திரைப்படப் பாடலாசிரியர் கு. மா. பாலசுப்பிரமணியம் (மே 13, 1920 – நவம்பர் 4, 1994)

Entertainment News

Popular Categories