தனது 13 வயது பையனுக்கு 23 வயது பெண்ணை ‘கட்டி’ வைத்த அம்மா!

marriageJPG - 2026

ஆந்திர மாநிலத்தில் 13 வயது சிறுவனுக்கும் 23 வயது இளம் பெண்ணுக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றதாக வெளியான புகைப்படத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டது. இதை அடுத்து முதற்கட்ட விசாரணையில் இறங்கிய போலீஸார், அந்தச் சிறுவனின் தாய் நோயுற்று இருந்ததாகவும், தன்னையும் தனக்குப் பின் தன் மகனையும் யாரும் பார்த்துக் கொள்ள மாட்டார்கள் என நினைத்ததால், சிறுவனாக இருந்தாலும் பரவாயில்லை என்று தன் மகனுக்கு உறவுக்காரப் பெண்ணை திருமணம் செய்து வைத்ததாகவும் கூறியுள்ளனர்.

தனது மகனுக்கு மணமுடிக்க முடிவு செய்த அந்தத் தாய், சொந்த பந்தங்கள் மூலம் தீவிரமாக தேடி, ஒருவழியாக தூரத்து உறவு முறையில் 23 வயதுப் பெண்ணைத் தேர்வு செய்துள்ளார். அந்தத் தாயின் முழு ஏற்பாட்டின் பேரில்தான் இந்தத் திருமணம் நடந்துள்ளது என்று கூறியுள்ளனர் போலீஸார்.

இவ்வளவு ரகசியமாக திருமணம் செய்த போதும், அந்தத் திருமண நிகழ்வுக்கு வந்த உறவினர்களில் ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளார். அது வைரலாகப் பரவியது, போலீஸார் தாமாக முன்வந்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

போலீஸார் விசாரிப்பது குறித்து அறிந்த சிறுவனின் பெற்றோர், உறவினர்கள், பெண் வீட்டார் என அனைவரும் தலைமறைவாகி விட்டனர். விசாரிக்கச் சென்ற போலீஸார், பூட்டுப் போட்டுப் பூட்டியிருந்த வீட்டைக் கண்டு திரும்பியுள்ளனர். இருப்பினும், போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனராம். இந்தச் சம்பவம் குறித்து துணை ஆட்சியர் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்

இதே சம்பவம் குறித்து இன்னொரு தகவல் வெளியானது. ஆந்திராவின் கர்னூல் மாவட்டம் கவுதாலம் அருகிலுள்ள உப்பரஹால் கிராமத்தை சேர்ந்த அந்த 13 வயது சிறுவனும், கர்நாடக மாநிலம் சனிக்கனூரைச் சேர்ந்த 23 வயது அய்யம்மாள் என்பவரும் தூரத்து உறவினர்கள் என்றும், இதனால் ஒருவர் வீட்டுக்கு ஒருவர் அடிக்கடி சென்று வந்தபோது பழக்கம் ஏற்பட்டு, காதல் மலர்ந்ததாகவும், கடந்த மாதம் 27ஆம் தேதி உப்பரஹால் கிராமத்தில் அவர்களுக்கு பெற்றோரே திருமணத்தை நடத்தி வைத்ததாகவும் சமூக வலைத்தளங்களில் வேறொரு தகவல் உலா வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories