December 5, 2025, 8:11 PM
26.7 C
Chennai

தனது 13 வயது பையனுக்கு 23 வயது பெண்ணை ‘கட்டி’ வைத்த அம்மா!

marriageJPG - 2025

ஆந்திர மாநிலத்தில் 13 வயது சிறுவனுக்கும் 23 வயது இளம் பெண்ணுக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றதாக வெளியான புகைப்படத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டது. இதை அடுத்து முதற்கட்ட விசாரணையில் இறங்கிய போலீஸார், அந்தச் சிறுவனின் தாய் நோயுற்று இருந்ததாகவும், தன்னையும் தனக்குப் பின் தன் மகனையும் யாரும் பார்த்துக் கொள்ள மாட்டார்கள் என நினைத்ததால், சிறுவனாக இருந்தாலும் பரவாயில்லை என்று தன் மகனுக்கு உறவுக்காரப் பெண்ணை திருமணம் செய்து வைத்ததாகவும் கூறியுள்ளனர்.

தனது மகனுக்கு மணமுடிக்க முடிவு செய்த அந்தத் தாய், சொந்த பந்தங்கள் மூலம் தீவிரமாக தேடி, ஒருவழியாக தூரத்து உறவு முறையில் 23 வயதுப் பெண்ணைத் தேர்வு செய்துள்ளார். அந்தத் தாயின் முழு ஏற்பாட்டின் பேரில்தான் இந்தத் திருமணம் நடந்துள்ளது என்று கூறியுள்ளனர் போலீஸார்.

இவ்வளவு ரகசியமாக திருமணம் செய்த போதும், அந்தத் திருமண நிகழ்வுக்கு வந்த உறவினர்களில் ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளார். அது வைரலாகப் பரவியது, போலீஸார் தாமாக முன்வந்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

போலீஸார் விசாரிப்பது குறித்து அறிந்த சிறுவனின் பெற்றோர், உறவினர்கள், பெண் வீட்டார் என அனைவரும் தலைமறைவாகி விட்டனர். விசாரிக்கச் சென்ற போலீஸார், பூட்டுப் போட்டுப் பூட்டியிருந்த வீட்டைக் கண்டு திரும்பியுள்ளனர். இருப்பினும், போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனராம். இந்தச் சம்பவம் குறித்து துணை ஆட்சியர் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்

இதே சம்பவம் குறித்து இன்னொரு தகவல் வெளியானது. ஆந்திராவின் கர்னூல் மாவட்டம் கவுதாலம் அருகிலுள்ள உப்பரஹால் கிராமத்தை சேர்ந்த அந்த 13 வயது சிறுவனும், கர்நாடக மாநிலம் சனிக்கனூரைச் சேர்ந்த 23 வயது அய்யம்மாள் என்பவரும் தூரத்து உறவினர்கள் என்றும், இதனால் ஒருவர் வீட்டுக்கு ஒருவர் அடிக்கடி சென்று வந்தபோது பழக்கம் ஏற்பட்டு, காதல் மலர்ந்ததாகவும், கடந்த மாதம் 27ஆம் தேதி உப்பரஹால் கிராமத்தில் அவர்களுக்கு பெற்றோரே திருமணத்தை நடத்தி வைத்ததாகவும் சமூக வலைத்தளங்களில் வேறொரு தகவல் உலா வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories