தனது 13 வயது பையனுக்கு 23 வயது பெண்ணை ‘கட்டி’ வைத்த அம்மா!

marriageJPG - 2026

ஆந்திர மாநிலத்தில் 13 வயது சிறுவனுக்கும் 23 வயது இளம் பெண்ணுக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றதாக வெளியான புகைப்படத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டது. இதை அடுத்து முதற்கட்ட விசாரணையில் இறங்கிய போலீஸார், அந்தச் சிறுவனின் தாய் நோயுற்று இருந்ததாகவும், தன்னையும் தனக்குப் பின் தன் மகனையும் யாரும் பார்த்துக் கொள்ள மாட்டார்கள் என நினைத்ததால், சிறுவனாக இருந்தாலும் பரவாயில்லை என்று தன் மகனுக்கு உறவுக்காரப் பெண்ணை திருமணம் செய்து வைத்ததாகவும் கூறியுள்ளனர்.

தனது மகனுக்கு மணமுடிக்க முடிவு செய்த அந்தத் தாய், சொந்த பந்தங்கள் மூலம் தீவிரமாக தேடி, ஒருவழியாக தூரத்து உறவு முறையில் 23 வயதுப் பெண்ணைத் தேர்வு செய்துள்ளார். அந்தத் தாயின் முழு ஏற்பாட்டின் பேரில்தான் இந்தத் திருமணம் நடந்துள்ளது என்று கூறியுள்ளனர் போலீஸார்.

இவ்வளவு ரகசியமாக திருமணம் செய்த போதும், அந்தத் திருமண நிகழ்வுக்கு வந்த உறவினர்களில் ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளார். அது வைரலாகப் பரவியது, போலீஸார் தாமாக முன்வந்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

போலீஸார் விசாரிப்பது குறித்து அறிந்த சிறுவனின் பெற்றோர், உறவினர்கள், பெண் வீட்டார் என அனைவரும் தலைமறைவாகி விட்டனர். விசாரிக்கச் சென்ற போலீஸார், பூட்டுப் போட்டுப் பூட்டியிருந்த வீட்டைக் கண்டு திரும்பியுள்ளனர். இருப்பினும், போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனராம். இந்தச் சம்பவம் குறித்து துணை ஆட்சியர் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்

இதே சம்பவம் குறித்து இன்னொரு தகவல் வெளியானது. ஆந்திராவின் கர்னூல் மாவட்டம் கவுதாலம் அருகிலுள்ள உப்பரஹால் கிராமத்தை சேர்ந்த அந்த 13 வயது சிறுவனும், கர்நாடக மாநிலம் சனிக்கனூரைச் சேர்ந்த 23 வயது அய்யம்மாள் என்பவரும் தூரத்து உறவினர்கள் என்றும், இதனால் ஒருவர் வீட்டுக்கு ஒருவர் அடிக்கடி சென்று வந்தபோது பழக்கம் ஏற்பட்டு, காதல் மலர்ந்ததாகவும், கடந்த மாதம் 27ஆம் தேதி உப்பரஹால் கிராமத்தில் அவர்களுக்கு பெற்றோரே திருமணத்தை நடத்தி வைத்ததாகவும் சமூக வலைத்தளங்களில் வேறொரு தகவல் உலா வருகிறது.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories