அன்னையர் தினத்தில் அனைவரையும் கவர்ந்த மணற்சிற்பம்! மோடி அன்னையை வணங்கும் அழகுக் காட்சி!

Published:

modi mother sand pic sudarsan patnaik - 2026

ஒடிசா மணல் சிற்பக் கலைஞர் சுதர்ஸன் பட்நாயக் ஒவ்வொரு நிகழ்வுக்கும் தனது கற்பனைத் திறனால் கடற்கரையில் அழகிய மணல் சிற்பத்தை வரைவார். பார்ர்வையாளர்களின் பாராட்டைப் பெறும் அந்தச் சிற்பத்தை தனது டிவிட்டர் பதிவில் வெளியிடுவார்.

இன்று சர்வதேச அன்னையர் தினம் என்பதால், அது குறித்த மணல் சிற்பத்தை வரைந்தார். வித்தியாசமாக, பாரதப் பிரதமர் மோடி தனது அன்னையை வணங்குவது போன்ற சிற்பத்தை அமைத்தார். இது பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. டிவிட்டர் பதிவிலும் ஆயிரக்கணக்கில் லைக்ஸும் ரிடிவீட்டும் தூள் பறக்கிறது.

அன்னையர் தினம் என்பது உலக அன்னையர், தாய்மையை போற்றும் நாளாக அன்னா ஜார்விஸால் மேற்கு விர்ஜினியாவின் கிராப்டன் நகரில் உருவாக்கப்பட்டது. அன்னா ஜார்விஸ் அன்னைகளுக்காக பாடுபட்டவர் என்பதால், அவரை மையப்படுத்தி இந்த தினம் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மே 2ம் ஞாயிறன்று அன்னையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img