பேஸ்புக்கில் போஸ்ட் செய்து புகார்: கோல்கத்தா பஸ்ஸில் பெண்கள் முன் ‘சுய இன்பம்’ செய்தவர் கைது:

man mastubate in kolkatta bus complaint - 2026

ஹூக்ளி மாவட்டத்தின் பைத்யாபதியைச் சேர்ந்த நபர் பஸ்ஸில் பயணம் செய்யும் போது, இரு பெண்கள் முன் சுய இன்பம் அன்பவித்தாராம். இந்தப் படத்தையும் வீடியோவையும் தங்கள் பேஸ்புக்கிலும் போலீஸாரின் பேஸ்புக்கிலும் பகிர்ந்து புகார் அளித்த சிறிது நேரத்தில், குறிப்பிட்ட நபர் கைது செய்யப் பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுப் பேருந்தில் இரு பெண்கள் முன்னர் அநாகரிகமாக நடந்து கொண்டதாகக் கூறி கோல்கத்தா போலீஸார் சனிக்கிழமை ஒருவரை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோவை இரண்டு பெண்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர். போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அந்த நபரைக் கைது செய்தனர்.

அந்த நபர் ஒரு தொழிலாளி என்றும், ஷ்யாம்புகூர் நகர் காவல் நிலையம் பகுதியில் இருந்து அவர் கைது செய்யப்பட்டார் என்றும் கொல்கத்தா போலீஸார் தங்களின் பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளனர்.

ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள பைத்யாபதியில் இருந்து வந்தவர் அந்த நபர் என்றும், அவரது செய்கையால் பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து புகார் வந்த சில மணி நேரத்திற்குள் அவர் கைது செய்யப்பட்டார் என்றும் நகர போலீஸார் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

இது குறித்த வீடியோ பதிவை அந்த இரண்டு பெண்களும் தங்கள் பேஸ்புக் பக்கத்திலும், கொல்கத்தா காவல்துறையின் பேஸ்புக் பக்கத்திலும் பதிவு செய்தனர். அதனைக் கண்டு போலீசார் விசாரணை நடத்தி அந்த நபரைக் கைது செய்தனராம்.

“பஸ் நடத்துனருக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, ​​எங்கள் வேண்டுகோளை அவர் புறக்கணித்துவிட்டார். இதே நபர், பதினைந்து நாட்களுக்கு முன்னர் இதே போன்று மோசமான சைகைகள் செய்தபோது எங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. எனவே எங்களால் எதுவும் செய்யமுடியவில்லை. எனவே இப்போது வீடியோ பகிர்ந்தோம். எங்களுக்கு நீதி தேவை” என்று பாதிக்கப்பட்ட தனது பேஸ்புக் பதிவில் அந்தப் பெண் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து குறிப்பிட்ட போலீஸார், “எங்களுக்கு எவ்வித புகாரும் தேவையில்லை. எங்கள் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோக்களே எங்களுக்குப் போதும். நாங்கள் ஏற்கனவே ஒரு வழக்கு இதுகுறித்து தாக்கல் செய்துள்ளோம், குற்றவாளிகளைக் கண்காணிக்க நாங்கள் முயற்சி செய்கிறோம்” என்று கூறிய போலீஸார், பின்னர் அந்த நபரைக் கைது செய்துவிட்டதாக பேஸ்புக் பக்கத்திலேயே தெரிவித்திருந்தனர்.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories