சொன்ன பணம் கொடுக்கல..! கல்யாணம் செஞ்ச கால் மணி நேரத்தில் விவாகரத்து!

marriage contract - 2026

தன் மாமனார் சொன்ன பணத்தைக் கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டதால், கௌரவம் பாதிக்கப் பட்டதாகக் கூறி, கல்யாணம் செய்துகொண்ட கால் மணி நேரத்தில் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் ஒருவர் திருமணத்துக்காக மணப் பெண் தேடியுள்ளார். மணமகள் கிடைத்து, அவளது தந்தையிடம் பணம் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். அப்போது ஒரு லட்சம் தினார் கொடுத்து (20,000 பவுண்ட்) உங்கள் மகளை திருமணம் செய்கிறேன் என மணமகளின் தந்தையிடம் கூறியுள்ளார் அவர். இதற்கு அந்தப் பெண்ணின் தந்தையும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இவர்களது திருமணம் நண்பர்கள் உறவினர்கள் முன்னிலையில் ஷரியா நீதிபதியின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த பின்னர், வாக்குறுதி அளித்த படி, பணத்தை தருமாறு மணமகளின் தந்தை கேட்டுள்ளார். அப்போது அந்த மணமகன் 50 ஆயிரம் தினார் மட்டுமே (10,000 பவுண்ட்) கொடுத்தாராம்.

வாக்குறுதி அளித்து சொன்ன தொகையைக் கொடுக்காமல், அதில் பாதியளவு மட்டுமே கொடுத்ததால் கோபம் கொண்ட மணமகளின் தந்தை, பொறுமையிழந்து அங்கே வந்திருந்த அனைவரின் முன்னிலையிலும் மணமகனிடம் சண்டை போட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தால் தனக்கு அவமானம் நேர்ந்துவிட்டதாக எண்ணினார் அந்த மணமகன். இப்படிப்பட்ட பெண்ணும் மாமனாரும் வேண்டாம் என முடிவு செய்த அவர், திருமணமான 15 நிமிடத்திலேயே தலாக் சொல்லி அந்தப் பெண்ணை விவாகரத்து செய்துள்ளார்.

கல்யாண காண்ட்ராக்டில் கையெழுத்து போட்ட கால் மணி நேரத்தில் அதை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். இப்படி 15 நிமிடத்தில் மணமுறிவு ஏற்பட்டது ஒன்றும் எமிரேட்ஸ் வரலாற்றில் அதிசயமானது இல்லையாம்.

கல்யாணம் செய்த சில நொடிகளில் தலாக் சொல்லி ஏற்கெனவே ஒருவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாராம். கடந்த 2012ல் கல்யாணம் முடிந்த கையுடன் பெண்ணின் தந்தை, தன் பெண் பார்த்து வரும் வேலையை தொடர்ந்து செய்துவருவார் என்று கூறியதும், அந்த நபர் தலாக் சொல்லிவிட்டாராம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories