December 5, 2025, 6:13 PM
26.7 C
Chennai

கற்பனைல பிட்டு போடுறதுக்கும் ஒரு லிமிட் இருக்கு… செந்தமிழை மறந்த சீமான் அண்ணே…!

13 May28 Seeman - 2025

வன்முறையைத் தூண்டி கத்துவதால் குண்டர் தடுப்புச் சட்டத்திலும், தேச பிரிவினை வாதத்தைத் தூண்டி குரைப்பதால் தேசவிரோத வழக்கிலும் கைது செய்யப்பட வேண்டிய சைமன் செபஸ்டியான் கவனத்திற்கு,

படகில் போனேன் என்றதோடு நிறுத்தியிருக்கலாம், ஆனால் உன் கற்பனை நீண்டதால் “ஆமை ஓடு, சிங்களன் பட்டாசு சுட்டான், வானம் வானவில் வரவேற்பு போட்டது” என நீ போட்ட extra பிட்டு…,

“புலிகள் எனக்கு விருந்து வைத்தாங்க” என நிறுத்தியிருக்கலாம், ஆனால் உன் கற்பனை நீண்டதால் “28 கிலோ ஆமை கறி, ஆறுவகை ஏறால், ஆறுவகை நண்டு” என நீ போட்ட extra பிட்டு…,

“அண்ணனுடன் விருந்து உண்டேன்” என நிறுத்தியிருக்கலாம், ஆனால் உன் கற்பனை நீண்டதால் “அண்ணனுக்கும் எனக்கும் சாப்பாடு போட்டி நடந்தது” என நீ போட்ட extra பிட்டு…,

“அண்ணன் எனக்கு துப்பாக்கி சுட பழக்கினார்” என நிறுத்தியிருக்கலாம், ஆனால் உன் கற்பனை நீண்டதால் “முதலில் கைத்துப்பாக்கி எனவும், பிறகு AK74” எனவும் நீ மாற்றி மாற்றி போட்ட extra பிட்டு…,

“AK74 சுட்டு பழகினேன்” என நிறுத்தியிருக்கலாம், ஆனால் உன் கற்பனை நீண்டதால் “இந்தியாவிலேயே நீ தான் AK74 சுட்டு பழகிய ஒரே ஆளு, இதை போய் இந்தியாவிலே சொல்லு” என தலைவரே சொன்னார் என நீ போட்ட extra பிட்டு..

“அண்ணன் என்னை பார்த்து பேச தயங்கினார்” என நிறுத்தியிருக்கலாம், ஆனால் உன் கற்பனை நீண்டதால் “ஆங்கிலத்தில் பேசினால் தம்பி திட்டுவான் என பிரபாகரன் பயந்து தயங்கி நின்றார்” என நீ போட்ட extra பிட்டு…,

“என்னை தங்க வைத்ததால் இருவரை சுட்டு கொன்றனர்” என நிறுத்தியிருக்கலாம், ஆனால் உன் கற்பனை நீண்டதால் “முதலில் யாழ்ப்பாண மாணவர்கள்
எனவும் பிறகு எனக்காக அண்ணன் தவம் சுட்டு கொல்லப்பட்டார்” எனவும் நீ மாற்றி மாற்றி போட்ட extra பிட்டு…,

“அரிசி கப்பல்” என நிறுத்தியிருக்கலாம், ஆனால் உன் கற்பனை நீண்டதால் “40,000 டன் ஆஸ்திரேலிய அரிசி கப்பல்” என நீ போட்ட extra பிட்டு…,

“அங்கே தான் சுட்டு பழகினோம்” என நிறுத்தியிருக்கலாம், ஆனால் உன் கற்பனை நீண்டதால் “தலைவர் அந்த கப்பலை எனக்கு சுட்டு பழக கொடுத்தார்” என நீ போட்ட extra பிட்டு…,

“அனைவரையும் அரசியலில் வீழ்த்துவேன்” என நிறுத்தியிருக்கலாம், ஆனால் உன் கற்பனை நீண்டதால் “அனைவரையும் வெட்டுவேன், குத்துவேன், கொல்லுவேன், உயிரோடு வைச்சு கொளுத்துவேன்” என நீ போட்ட extra பிட்டு…,

இப்படி நீ கற்பனை வளத்துடன் போட்ட எண்ணற்ற பிட்டுகளால்.., முறுக்கேறி போன தம்பிகள் “அடி வெட்டு குத்து, உதை, என வன்முறை தான் அனைத்திற்க்கும் வழி என்கிற வன்ம நிலைக்கு இன்று வந்திருக்கின்றனர்.

நிஜத்தில் சைமன் செபஸ்டியான் ஒரு விசயத்தை புரிந்து கொள்ள வேண்டும். “உன்னை அடித்து உன் வாயை உடைத்து விடுவேன்” என எவரையாவது பார்த்து சீமான் மிக சுலபமாக, உணர்ச்சி தெறிக்க, நரம்பு முறுக்கி கொண்டு சொல்லலாம். ஆனால், அடுத்தவர் வாயை உடைக்க உன் கைகள் நீளும் வேளையில் அவனின் கைகள் பூ பறித்து கொண்டிருக்காது” என்பதை சைமன் செபஸ்டியான் உணர வேண்டும். காரணம், நீ கையில் எடுக்க விரும்பும் வன்முறையின் இருபக்கமும் கூரானவை!!!

அதனால் சைமன் செபஸ்டியான் .., தன் தம்பிகளை மாற்ற வேண்டுமெனில், முதலில் சைமன் செபஸ்டியான் தன்னை மாற்றி கொள்ள வேண்டும்…,!!! கேட்டால், “நான் கிராமத்தான், இயல்பானவன், நான் சினம் கொண்ட இனத்தவன், வாளோடும் வேலோடும் பிறந்தவன்” என கதைகளை சொல்ல வேண்டாம்…., காரணம், இது சைமன் செபஸ்டியானுக்கு மட்டுமல்ல, இங்கே அனைவருக்குமே இந்த வரலாறும் கெத்தும் துணிச்சலும் உண்டு.

இங்கே சைமன் செபஸ்டியான் குத்தினால் தான் மட்டும் ரத்தம் வரும் என்றில்லை…,
பவர் ஸ்டார் குத்தினாலும் ரத்தம் வரும்,
பாரிசாலனை குத்தினாலும் ரத்தம் வரும்!!!

ஆதலால்…, “கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு”
என்ற பொன்மொழியை நினைவுறுத்தி, தம்பி சைமன் செபஸ்டியான் அவர்களே, “முதலில் நீங்கள் மாறுங்கள்.., மாற்றம் உங்களிலிருந்து தொடங்கட்டும்”…!!!!!

பின்குறிப்பு: வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வரும் கருத்து…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories