தென்னாப்ரிக்காவில் நீங்களே கார் ஓட்டலாம்

Published:

 

 
சுற்றுலாவிற்காக நீங்கள் வெளிநாடு சென்றிருந்தால் உங்கள் நண்பர் காரை நீங்கள் ஓட்டமுடியாது.

ஒரு வெளிநாட்டிற்கு சென்று அங்கு கார் ஓட்டுவது அவ்வளவு சுலபமல்ல. முதலில் இன்டர்நேஷனல் டிரைவிங் லைசன்ஸ் வேண்டும். அந்த நாட்டின் சட்ட திட்டங்கள் தெரிந்திருக்க வேண்டும். இப்படி ஏகப்பட்ட கெடுபிடிகள் இருக்கும்.

ஆனால், தென்னாப்ரிக்காவில் அப்படி எதுவும் இல்லை. உங்களுக்கு கார் ஓட்ட தெரிந்திருந்தால் போதும். கூடுதலாக இந்திய டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். இவை இருந்தால் போதும். தென்னாப்ரிக்காவில் தாரளமாக கார் ஓட்டலாம்.

3.bp.blogspot.com NIm8GpzRKj0 VQCaxwD88MI AAAAAAAADWE IAj 5510o4k s1600 stock footage couple driving convertible car cabriolet cape town south africa steadicam shot - 2026

இந்திய சாலைகளில் இடது பக்கம் வாகனங்கள் செல்வது போலத்தான் அங்கேயும்… அதனால் பிரச்சனை இல்லை. விமானத்தில் இருந்து இறங்கிய உடனே இங்கே விரும்பிய காரை ஓட்டலாம். கெம்ப்பெர் என்ற வேனும் வாடகைக்கு கிடைக்கும்.

நீங்கள் அந்த நாட்டில் ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு சென்று அங்கிருந்து விமானத்தில் பயணம் மேற்கொள்பவராக இருந்தாலும் கார் வாடகைக்கு கிடைக்கும். காரை திரும்ப வந்து ஒப்படைக்க வேண்டியதில்லை.  நினைத்த இடத்தில் விட்டுச் செல்லலாம். காரை எந்த இடத்திலும் எடுக்கலாம். இப்படி நிற்கும் கார்களை எடுத்துச் செல்வதற்காகவே ஆட்கள் இருக்கிறார்கள்.

1.bp.blogspot.com wsAnx1K7MTU VQCbCatveII AAAAAAAADWM x4W10sDFVH0 s1600 stock footage couple driving convertible car cabriolet cape town south africa steadicam shot%2B%281%29 - 2026

சுற்றுலா பயணிகளே கார் ஓட்டும் இந்த திட்டத்தை ‘யூரோப் கார் சவுத் ஆப்பிரிக்கா’ என்ற நிறுவனம் நடத்தி வருகிறது.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img