நீங்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்தாலும்… இந்திய தூதரகம் உங்களுக்கு உதவும்!

sushmatweet - 2026

செவ்வாயில் இருந்தாலும் இந்திய தூதரகம் உங்களை காப்பாற்றும் சுஷ்மாவின் அந்த சிறப்பான ட்வீட் இது! இது இப்போது வைரலாகி வருகிறது.

நீங்கள் செவ்வாய் கிரகத்தில் மாட்டிக் கொண்டு இருந்தாலும் இந்திய தூதரகம் அங்கே உங்களுக்கு உதவி புரியும் என்று சுஷ்மா சுவராஜ் கடந்த 2017 ஜூன் 7-ஆம் தேதி பதிவிட்ட ட்விட்டர் பதிவு இப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக மீண்டும் பரப்பப்பட்டு வருகிறது.

சுஷ்மா சுவராஜ் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர். இவர் 67 வயதில் செவ்வாய்க்கிழமை நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். கடந்த மோடி அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது டிவிட்டர் பதிவுகளிலேயே பாஸ்போர்ட் விசா உள்ளிட்ட வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை உடனடியாக கொடுத்தவர்!

வெளிநாடுகளில் சிக்கிக்கொண்டு தவிப்பவர்கள் பணி நிமித்தமாக வெளிநாடு சென்ற இந்தியர்கள் படும் சிரமங்கள் உள்ளிட்ட பலவற்றுக்கு தனது ட்விட்டர் பதிவில் புகார் செய்த வுடனேயே,  அவர்களுக்கு உதவுவதற்கு நடவடிக்கை எடுத்த மிக எளிமையான பெண்மணி என்று பெயர் எடுத்தவர். அவரது டிவிட்டர் பதிவுகளின் மூலமே பல சிக்கல்களுக்கு தீர்வு கண்டுள்ளார். இதனால் இந்தியர்கள் பெரும்பாலானவர்களால் கொண்டாடப்படும் புகழ்பெற்ற பெண்மணியாக சுஷ்மா ஸ்வராஜ் கடந்த காலத்தில் விளங்கினார்!

நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுக்கு உதவத்தான் நாங்கள் இருக்கிறோம் என்று அதிரடியாக செயல்பட்ட சுஷ்மா ஸ்வராஜை கிண்டலடிக்கும் விதமாக 2017ல் ஒரு டிவிட்டர் பயனாளர் சுஷ்மா ஸ்வராஜை டேக் செய்து ஒரு ட்விட் செய்திருந்தார்!

அதில் நான் செவ்வாய் கிரகத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார். அதற்கு சுஷ்மா ஸ்வராஜ் அளித்த பதில் பெரும்பாலானவர்களால் கொண்டாடப்பட்டது!

மிகவும் எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் அவர் அளித்த பதிலை கேட்டு டிவிட்டர் உலகமே கொண்டாடியது.

நீங்கள் செவ்வாய் கிரகத்தில் மாட்டிக் கொண்டு இருந்தாலும் இந்திய தூதரகம் அங்கே உங்களுக்கு உதவி புரியும் – என்று அவர் பதிவிட்டு இருந்தார்!

தற்போது சுஷ்மா ஸ்வராஜ் காலமான நிலையில் அவரது இந்த டிவிட்டர் பதிவை பலரும் மீண்டும் எடுத்து பதிவு செய்து தங்களது அனுதாபத்தையும் அவரது உதவும் மனப்பான்மையும் குறிப்பிட்டு வருகின்றனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

Entertainment News

Popular Categories